Followers

Saturday, October 27, 2018

குரு தசா ஏற்படுத்தும் கடன்


வணக்கம்!
         நமது தளத்திற்க்கு வரும் பலர்க்கு குரு தசா நடக்கும். பலருக்கு குரு தசா முடியும் நிலையில் இருக்கும். குரு தசா நடக்கும் நண்பர்களுக்கு ஒரு அறிவுரை சொல்லுவது உண்டு. குரு தசா என்றாலே அது பணம் சம்பந்தப்பட்ட ஒரு தசாவாக தான் இருக்கின்றது. பலருக்கு குரு பணத்தை அள்ளிக்கொடுக்கின்றது. இதில் எந்தவித சந்தேகமும் வேண்டியதில்லை.

பணம் வருகின்றது என்று பலர் ஆடம்பர ஆட்டம் நிறைய போட்டுவிடுவார்கள். தற்சமயமும் சிலர் ஆடம்பர ஆட்டம் போட்டுக்கொண்டு தான் இருக்கின்றனர். இந்த ஆடம்பர ஆட்டம் எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்கு பிறகு நின்றுவிடுகின்றது.

குரு தசா முடியும் தருவாயில் இருக்கும் நண்பர்களுக்கு அதிகபடியான கடன் சிக்கலை கொடுத்துவிடுகின்றது. கடனில் மாட்டிக்கொண்டு அதில் இருந்து வெளியில் வருவதற்க்கு நிறைய கஷ்டபடுகின்றனர்.

குரு தசா நடக்கும் நபர் பணம் உங்களுக்கு வந்தால் அந்த பணத்தை சேமிக்கும் வழியில் தான் முதல் கவனம் செலுத்தவேண்டும். பணம் தான் நமக்கு வருகின்றது நாம் இஷ்டத்திற்க்கு செலவு செய்யலாம் என்று மட்டும் நினைக்கவேண்டாம்.

குரு தசா கொடுப்பது எல்லாம் குரு தசாவிலேயே பிடிங்கி எடுத்துக்கொண்டு விடுகின்றது. குரு தசா நடக்கும் அனைவரும் கொஞ்சம் கவனமாக இருந்துக்கொண்டு வாருங்கள். கடன் இல்லா வாழ்க்கையை வாழ பழகிக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: