Followers

Saturday, October 6, 2018

தொழில் முடக்கம் பரிகாரம்


வணக்கம்!
        தொடர் மழைக்காரணமாக அம்மன் பூஜை நடத்தமுடியாமல் இருக்கின்றது. மழைவிட்டவுடன் உடனே அம்மன் பூஜையை நடத்திவிடுவேன். நவராத்திரி யாகத்திற்க்கு கலந்துக்கொள்பவர்கள் உடனே தொடர்புக்கொள்ளவும்.

நமது தொழிலில் தேக்க நிலை அல்லது தொழில் முடங்கி போவது போன்ற நிலை உங்களுக்கு உருவாகினால் நீங்கள் உடனே ஒரு ஆன்மீகவாதியை சந்திக்கவேண்டும். ஆன்மீகவாதியை சும்மா சந்தித்து வந்தாலே போதும் அது உங்களுக்கு மறுபடியும் தொடங்கி நடக்க ஆரம்பிக்கும்.

சக்தி படைத்தவர்களிடம் செல்லும்பொழுது நமது தேக்க நிலை அவர்களின் சக்தியால் விலகி போய்விடும். இதனை அனைவரும் செய்ய வேண்டும். ஒரு தொழில் முடக்கம் அல்லது வாழ்க்கையில் ஏதோ ஒன்று தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றது என்றால் கண்டிப்பாக அது உங்களுக்கு ஏதோ ஒரு கர்மா தாக்குகின்றது என்பதால் தான் நடக்கின்றது.

பலர் கோவிலுக்கு சென்று வருவார்கள். கோவிலுக்கு சென்று வருவதைவிட சக்தி படைத்தவர்களிடம் தொடர்பை ஏற்படுத்தும்பொழுது அது உடனே நமக்கு நடக்க ஆரம்பித்துவிடும். கோவிலை விட மனிதர்களிடம் இருக்கும் சக்தி ஒரு சில இடங்களில் அதிகமாக இருக்கின்றது.

ஜாதககதம்பத்தில் பழைய பதிவில் கூட சொல்லிருக்கிறேன். தொழில் முடக்கத்திற்க்கு நீங்கள் விரும்பும் ஒரு இடத்திற்க்கு சென்று வாருங்கள் என்று சொல்லிருக்கிறேன். உங்களுக்கு இதுவும் நன்மையை தரும். ஒரு சிலருக்கு மருத்துவரிடம் சென்று காண்பித்து வந்தாலே சரியாகும். மனநல மருத்துவராக பார்த்து சென்று வந்தால் மிகவும் நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: