Followers

Tuesday, October 9, 2018

நவராத்திரி


வணக்கம்!
          வெயில் காட்ட தொடங்கிவிட்டது ஒரு இரு நாட்களில் அம்மன் பூஜையை நடத்திவிடலாம். நவராத்திரி யாகம் நாளை முதல் ஆரம்பம் ஆகின்றது. இதுவரை நான் யாகத்தில் கலந்துக்கொள்கிறேன் என்று சொன்னவர்கள் கட்டணத்தை செலுத்தி வையுங்கள்.

கடந்த வருடத்தில் செய்த நபர்கள் மூன்று பேர் இந்த வருடத்தில் செய்யவில்லை. நானே அவர்களை இந்த வருடம் செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அவர்களின் வீட்டில் விஷேசம் இருப்பதால் செய்யவேண்டாம் என்று சொல்லிருக்கிறேன். அவர்கள் செய்த நாட்கள் எல்லாம் இதுவரை புக் செய்யவில்லை பிறர் அந்த நாட்களை வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நவராத்திரி என்று இல்லாமல் நமது நண்பர்கள் தனியாக பணம் அனுப்பி இதனை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சொல்லிருக்கின்றனர். பணம் என்பது கடினம் இல்லை ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கு என்று ஒதுக்கியதால் தான் உங்களிடம் மறுபடி மறுபடி கேட்டுக்கொண்டே இருக்கிறேன். புக்கிங் செய்த நாட்களில் யாருக்கு யாருக்கு செய்கிறோம் என்பதை அவர்களின் ஊர்களின் பெயரை மட்டும் பதிவில் போட இருக்கிறேன்.

ஒவ்வொருவரும் நவராத்திரி நாட்களில் நிறைய கோவிலுக்கு சென்று வாருங்கள். உங்களின் வீட்டில் விஷேசமாக இருந்தாலும் இப்படிப்பட்ட நாட்களில் கோவிலுக்கு சென்று வருவது நன்றாக இருக்கும்.

நவராத்திரி நாட்களில் இருவேளையிலும் மற்றும் உங்களின் வசதிகேற்ப கோவிலுக்கு சென்று வரலாம். ஒரு சில கோவில்கள் நவராத்திரி நாட்களில் தான் திறந்து கூட வைத்திருப்பார்கள். இப்படிப்பட்ட கோவில்களை தரிசிப்பது நல்லது என்பதால் தேடிச்சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: