Followers

Monday, October 22, 2018

குரு தசா


வணக்கம்!
          ஒருவருக்கு குரு தசா நடக்கின்றது என்றால் அவர்க்கு பணப்புழக்கம் கொஞ்சம் தாராளமாக தான் இருக்கும். ஏதோ ஒரு வழியில் பணவருகை என்பது நடந்துக்கொண்டே இருக்கும். குரு தசா நடந்தாலே அவர்கள் ஒரு கெத்தாக தான் இருப்பார்கள்.

குரு தசா நடந்தால் ஒரளவு வருமானம் இருக்கும் இதனை வைத்து பலர் என்ன செய்வார்கள் என்றால் பெரியளவில் பணம் வருவது போல பாவனை செய்வார்கள். ஒரளவு பணத்தை வைத்து பெரியளவில் பணம் இருக்கின்றது போலவே காட்டுவார்கள்.

நான் பார்த்தவரை நிறைய இடங்களில் இது இருக்கின்றது. அதாவது பணக்காரர்கள் என்பது போல காட்டிக்கொள்வார்கள். இதனால் என்ன நடக்க போகின்றது என்று கேட்கலாம். இவர்களிடம் சென்று நாம் ஏமாந்துவிடகூடாது என்பதற்க்காக தான் இதனை சொல்லுகிறேன்.

பணக்காரர்கள் என்று காட்டிக்கொண்டு ஏதாவது தொழில் செய்கிறேன் நீங்கள் இதற்கு பணமுதலீடு செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டு உங்களிடம் உள்ள பணத்தை அபகரித்துக்கொண்டு சென்றுவிடுவார்கள்.

குரு தசா பிறரை ஏமாற்றுமா என்று கேட்டால் பெரும்பாலும் இது நடக்கின்றது என்பதை சொல்லலாம். குரு தசா பிறரை ஏமாற்றியும் பிழைக்க வைக்கின்றது.பிறரை ஏமாற்றுகின்றது என்றால் அது பெரிளவில் நடைபெறுவதில்லை அங்கங்கே அவ்வப்பொழுது இது நடக்கின்றது.

விரைவில் சென்னையில் என்னை சந்திக்கலாம். சென்னையில் சந்திக்க விரும்பும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309   What'sApp Number: 9551155800 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: