Followers

Friday, October 19, 2018

விஜயதசமி நல்வாழ்த்துக்கள்


வணக்கம்!
          அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.

நமது தளத்திற்க்கு வரும் ஒவ்வொருவருக்கும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கவேண்டும் என்பது தான் என்னுடைய எண்ணம். இந்த எண்ணத்தை பலருக்கு நிறைவேற்றியிருக்கிறேன். பலருக்கு தற்சமயம் நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறேன்.

ஒருவரின் முன்னேற்றத்திற்க்கு முதல் எதிரியாக இருப்பது அவர்களின் குடும்பம் தான் என்று சொன்னால் அதனை நம்ப மாட்டேன் என்பீர்கள். உண்மையில் ஒவ்வொருவரின் குடும்ப சூழல் அவர்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வதில்லை என்று தான் சொல்லவேண்டும்.

குடும்பத்திற்க்குள்ளே நடைபெறும் தகராறு இந்த முன்னேற்றத்தை தடுக்கின்றது. ஒருவருக்கு பணத்தை வரவழைப்பது எளிமையான ஒன்று  ஆனால் அவர்களின் குடும்பத்தில் நடைபெறும் சண்டையை சமாதானம் செய்வதற்க்கே போதும் போதும் என்று ஆகிவிடுகின்றது.

குடும்ப உறுப்பினர்கள் தேவையை இல்லாமல் குடும்ப தலைவர்களின் மீது சண்டையை ஏற்படுத்த கூடாது. சண்டை இல்லாமல் இருந்தால் எப்பேர்பட்ட மோசமான குடும்ப தலைவனும் எளிதில் நல்ல வாழ்க்கையை கொடுக்க ஆரம்பித்துவிடுவார்.

ஒவ்வொரு குடும்பமும் முன்னேற்றத்தை நோக்கி செல்ல அதிகம் பெண்களுக்கு கடமை இருக்கின்றது ஆனால் அது சண்டை போட்டு தான் நடக்கவேண்டும் என்று இருக்ககூடாது. சமாதானமாக இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெறலாம்.

ஜாதககதம்பத்தில் தொடர்ந்து இணைப்பில் இருப்பவர்களின் குடும்பத்தில் சண்டை சச்சரவு நடந்தால் உடனே எனக்கு தெரியப்படுத்துகள். மறுநாள் உங்களின் குடும்பத்தில் சண்டை இருக்காது. அம்மனின் அருளால் இது உங்களுக்கு நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: