Followers

Wednesday, October 24, 2018

அனுபவம்


வணக்கம்!
          ஒவ்வொரு ஊரிலும் நான் சென்று வரும்பொழுது எல்லாம் ஒவ்வொரு அனுபவம் எனக்கு கிடைக்கும். நாம் ஆன்மீக பக்கம் சாய்ந்த பிறகு நாம் சென்று சேர்த்த அனுபவத்தை வைத்து தான் உங்களுக்கு ஜாதக கதம்பம் எழுதிக்கொண்டு வருகிறேன்.

இத்தனை நாளூம் நீங்கள் படித்துக்கொண்டே இருப்பதற்க்கு ஒவ்வொரு மனிதனின் அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்துக்கொண்டு இருப்பதால் தான் தொடர்ந்து படிக்கின்றீர்கள். ஏதோ கதை மாதிரி எழுதியிருந்தால் ஒருவரும் இந்த பக்கம் தலைவைத்து படுக்க மாட்டார்கள். 

இந்த காலத்தில் பிளாக் எழுதுகிறவர்களே குறைவு என்ற நிலையில் இருக்கின்றது. நமது ஜாதககதம்பத்தை மட்டும் தேடி தேடி நண்பர்கள் படிப்பதற்க்கு உண்மையை எழுதுவதால் தான் இது சாத்தியப்படுகின்றது. தொடர்ந்து படிப்பதற்க்கு உங்களுக்கு நன்றியை சொல்லி தான் ஆகவேண்டும்.

ஜாதகத்தை விட நம்முடைய ஆன்மீக வழியில் நமது மக்களுக்கு செய்யும் பணி என்பது அதிகமாக இருக்கின்றது. ஜாதகத்தில் இருந்து வரும் பிரச்சினையை உங்களுக்கு தீர்ப்பதற்க்கு நான் கற்ற ஆன்மீகம் தான் பெரியளவில் பயன்படுகின்றது.

நமது அம்மன் மற்றும் குருவின் ஆசியால் தான் இது சாத்தியப்பட்டது என்று சொல்லலாம். ஒவ்வொரு பதிவுகளில் உள்ள கருத்துக்களை உங்களின் வாழ்க்கைக்கு எடுத்து அதனை பயன்படுத்தி மேலே வருவதற்க்கு பார்க்கவேண்டும். ஏதோ வந்தோம் படித்தோம் என்று இருந்துவிடகூடாது. அனைத்தையும் பயன்படுத்திக்கொண்டு எப்படி மேலே வருவது என்பதை மட்டும் யோசிக்கவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: