Followers

Monday, June 17, 2019

வாழ்க்கை தத்துவம்


வணக்கம்!
          சும்மா இருந்தால் நாம் ஏதோ மாட்டிக்கொண்டு விட்டோம் இவன் நடவடிக்கையை இல்லை என்று சொல்லிவிடுவார்கள். ஏதோ ஒன்றை செய்துக்கொண்டே இருப்பது பாேலவே உங்களின் செயல்பாடு இருக்கவேண்டும்.

எந்த ஒரு பிரச்சினையையும் வேண்டாம் ஒதுங்கி இருக்கலாம் என்று இருந்தால் நீங்கள் எதுவும் செய்யாமல் இருந்துக்கொண்டு இருக்கின்றீர்கள் என்று அர்த்தமாக எடுத்துக்கொள்வார்கள். இந்த உலகத்தில் இப்படி தான் செயல்படவேண்டும் என்பதால் உங்களை வெளியில் காட்டிக்கொண்டே இருங்கள்.

இயற்கையும் நீங்கள் எதுவும் செய்யாமல் இருந்தால் வாய்ப்பையும் கொடுப்பதில்லை. உங்களுக்கு வாய்ப்பு கிடைப்பதற்க்கு எதையாவது செய்துக்கொண்டே இருங்கள் என்பதையும் சொல்லிவிடுகிறேன். இவன் எதுவும் செய்யமாட்டான் இவனுக்கு கொடுக்க கூடாது என்று இருந்துவிட்டால் நீங்கள் வெளியில் தெரியவே மாட்டீர்கள்.

தவறாக செய்துவிடுவோம் என்று பயந்த ஒதுங்கிக்கொண்டு இருப்பவர்களும் இருக்கின்றார்கள். தவறு செய்ய செய்ய தான் நமக்கு நல்ல அனுபவம் கிடைக்கின்றது. நல்ல அனுபவம் கிடைக்கும்பொழுது கொஞ்சநாளில் அனைத்திலும் சரியாகவே செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள்.

வாழ்வில் பெரியளவில் சாதிப்பவன் அனைவரும் ஏதோ ஒன்றை செய்துக்கொண்டே இருப்பவர்களாக இருப்பார்கள். சும்மா அமர்ந்து இருக்கமாட்டார்கள். எதுவும் செய்யாமல் இருப்பதைவிட சும்மா நடந்துக்கொண்டாவது இருங்கள் உயிரோடு இருக்கின்றான் என்றாவது சொல்லுவார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: