Followers

Friday, June 7, 2019

பீடை


வணக்கம்!
          ஒரு மனிதனுக்கு பீடை என்பது வரவே கூடாது. பீடை வந்துவிட்டால் அதன்பிறகு அவனை சரி செய்வது என்பது கடினமாகவே இருக்கும். பீடையை பற்றி நிறைய சொல்லிருக்கிறேன். இதனை மறுபடியும் சொல்லிக்கொண்டே இருப்பதற்க்கு இதில் இருந்து அனைவரும் மீளவேண்டும் என்பதற்க்காக சொல்லுகிறேன்.

ஒருவருக்கு பல வழிகளிலும் பீடை என்பது பிடிக்கின்றது அதில் மீண்டு வருவதற்க்கு பல வழிகளை சொல்லிருக்கிறோம். ஒருவர் இறப்பு வீட்டிற்க்கு சென்று வந்தபிறகு குளிக்கவில்லை என்றாலும் அந்த நபருக்கு பீடை பிடித்துவிடுவதும் உண்டு.

இறந்தால் அதில் இருந்து கிருமி போய்வதற்க்கு குளிக்க சொல்லிருந்தாலும் அதில் இருந்து பீடை பிடிக்கவும் செய்கின்றது அதனாலேயே குளிக்கவேண்டும். பலர் இன்றைய காலத்தில் இறப்பு வீட்டிற்க்கு சென்று வந்தால் குளிப்பதில்லை. இது நகர்புறத்தில் அதிகமாக இருக்கும்.

எந்த ஒரு இறப்பு வீட்டிற்க்கு நீங்கள் சென்றாலும் உடனே நீங்கள் குளித்துவிடவும். ஒரு சிலரோடு பழக்க வழக்கத்திலும் இந்த பீடை வருகின்றது என்பதையும் தெரிகின்றது. இதனையும் நீங்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

ஒருவரோடு பழகும்பொழுது அவர்களிடம் அதிகமான பீடைகள் இருந்தாலும் அது உங்களுக்கு தொற்றிக்கொள்ளும். இதனையும் நீங்கள் பார்த்துக்கொண்டு அதற்க்கு தகுந்தார்போல் பழக்கவழக்கம் வைத்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: