Followers

Tuesday, June 4, 2019

புகழ் பெறவைக்கும் வழிபாடு


வணக்கம்!
                இன்றைய காலத்தில் புகழை விரும்பாத மனிதர்களே கிடையாது என்று சொல்லலாம். அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் புகழ் பெற்று விளங்கவேண்டும் என்று நினைப்பார்கள். கலியுகத்தில் தன்னை காட்டிக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை கலியுகம் கொடுக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.

மனிதன் புகழ் பெறுவதற்க்கு இயற்கையாகவே நல்ல கிரகங்கள் அமைந்தால் புகழ் பெற்றுவிடுவான். நல்ல கிரகங்கள் ஜாதகத்தில் அமையவில்லை என்றால் அவன் பாடுபட்டு தான் புகழ்பெறவேண்டும். அவன் நிறைய போராட்டங்களை பெற்று புகழ் பெறவேண்டும்.

புகழை பெற்று தருவதற்க்கு வழிபாட்டில் முதன்மையாக இருப்பது அம்மன் வழிபாடாக தான் இருக்கும். அம்மனை வணங்கும் நபர்கள் ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் புகழ்பெற்று விளங்குவார்கள் வேறு எந்த வழிபாடு செய்தாலும் புகழ்பெறுவது கடினமான ஒன்றாகவே இருக்கும்.

அம்மனை நீங்கள் தொடர்ச்சியாக வழிபாடு செய்து வாருங்கள் கண்படிப்கா ஒரு நாள் நீங்கள் புகழின் உச்சத்தில் இருப்பீர்கள். வழிபாடு நடத்தகூட வேண்டாம் அம்மன் கோவிலில் சென்று படுத்துவிட்டு வாருங்கள்.

பல கோவில்கள் படுத்து உறங்கலாம் அப்படி தான் இருந்திருக்கின்றது. தற்பொழுது எல்லா கோவில்களிலும் கூட்டம் இருப்பதால் இதனை தவிர்கின்றனர். ஒரு சிலர் இரவு மட்டும் தங்கிவிட்டு வருவது போன்று இருக்கின்றது. 

அம்மன் என்று சொல்லும்பொழுது எந்த அம்மனை வணங்கலாம் என்ற கேள்வி எழும். எந்த அம்மனாக இருந்தாலும் சரி உங்களுக்கு எந்த அம்மன் கோவில் கிடைக்கின்றதோ அந்த கோவிலை நீங்கள் வழிபடலாம். ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று அங்கு இருந்துவிட்டு வாருங்கள் அதுபோதும் உங்களை பெரியளவில் புகழ் பெற வைத்துவிடும். ஒரு நாளில் நடந்துவிடுமா என்று கேட்கவேண்டாம் உங்களின் புண்ணியத்தை பொறுத்து அது அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: