Followers

Tuesday, June 4, 2019

பெளர்ணமி சிறப்பு அம்மன் யாக பூஜை


வணக்கம்!
          பெளர்ணமி அன்று சிறப்பு இரவு நேர யாகம் இருக்கின்றது. இதில் கலந்துக்கொள்ள விரும்பும் நண்பர்கள் தொடர்புக்கொள்ளவும். உங்களின் வசதிக்காக தற்பொழுதே இதனை அறிவித்துவிட்டேன். தேதி 16/06/2019 இரவு பெளர்ணமி சிறப்பு அம்மன் யாகம் செய்யப்படும்.

தோஷத்தைப்பற்றி நிறை பயம் அனைவருக்கும் இருக்கும் ஆனால் இதில் ஒன்றை சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். தோஷம் என்பது நாம் வாழும் நாட்டை பொறுத்தும் அமைக்கின்றது. பூமியின் உயர் மட்டத்தில் வசிப்பவர்களுக்கு உலக வரைபடத்தை எடுத்து அதில் மேலே வாழும் மக்களுக்கு அந்தளவுக்கு தோஷம் என்பது வருவதில்லை.

கிரகங்களின் முழு பலமும் இந்த நாட்டிற்க்கு கிடைக்கும்பொழுது இந்த நாட்டு மக்களுக்கு தோஷம் பெரியளவில் வேலை செய்யாது என்று சொல்லலாம். அதே நேரத்தில் கிரகத்தின் முழுபலனும் இந்த  மக்களுக்கு கிடைக்கும்.

ஒருவருக்கு ஒரு கிரகம் நீசம் அடைந்திருந்தால் அந்த கிரகத்தின் பாதிப்பு அந்த நபருக்கு பெரும்பாலும் இருக்காது. அவருக்கு பெரிய பாதிப்பை கிரகங்கள் ஏற்படுத்தாது. நீங்கள் நினைக்கலாம் இவர்களுக்கு மரணம் வராதா மற்றும் பிரச்சினைகள் வராதா என்று கேட்கலாம்.

பிரச்சினை என்பது பெரியளவில் வருவதற்க்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கும். மனிதன் தன்சுய எண்ணங்களால் உருவாக்கும் பிரச்சனை தானே தவிர மற்றபடி கிரகங்கள் பாதிப்பு குறைவு. மரணம் வருவது இயற்கை. கிரகங்களின் பாதிப்பால் வருகின்ற பிரச்சினை குறைவாகவே அங்கு இருக்கும்.

எனக்கு ஒரு கிரகம் நீசமாக இருக்கின்றது இதனை நான் போக்க அந்த நாடுகக்கு சென்று நான் தங்கிக்கொண்டு வாழலாமா என்று கேட்டால் கண்டிப்பாக அங்கு சென்று வாழலாம். உங்களின் நீச கிரகத்தின் பாதிப்பு அங்கு இருக்காது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: