Followers

Saturday, June 29, 2019

செல்வவளம்


வணக்கம்!
                          இன்று பழனி முருகன் கோவில் பயணம். 

ஒவ்வொருவரையும் நான் முடிந்தவரை வருடத்திற்க்கு ஒரு முறை சென்று வாருங்கள் என்று சொல்லிருக்கிறேன். அதனை ஏற்று பல நண்பர்கள் சென்று வந்திருக்கின்றனர். நீங்களும் அடிக்கடி சென்றால் நல்லது அல்லது வருடத்திற்க்கு ஒரு முறை சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

உங்களின் வீட்டில் சமையறையில் ஒரு பானையை தயார் செய்து அந்த பானையில் கொஞ்சம் காசு பணம் மற்றும் நகைகளை போட்டு வைத்திருங்கள் உங்களுக்கு நல்ல பணவரவு உங்களுக்கு இருக்கும். பல செல்வந்தர்கள் இதனை செய்து வருகின்றனர்.

பெரும்பாலும் ஒரு சிலருக்கு மட்டும் இதனை செய்ய சொல்லுவார்கள். நான் அனைவருக்கும் இதனை பரிந்துரை செய்து இருக்கிறேன். உங்களின் வீட்டில் சமையறை நன்றாக இருந்தால் தான் பணம் வரும் என்று ஒரு பதிவை தந்திருக்கிறேன்.

வீட்டில் எல்லா இடமும் சுத்தமாக இருக்கவேண்டும். அதே நேரத்தில் உங்களின் சமையறையும் சுத்தமாக இருக்கவேண்டும் என்று சொல்லிருக்கிறேன். முடிந்தவரை சமையறையில் கொஞ்சம் பணம் வைத்திருங்கள் உங்களுக்கு எப்படியும் பணம் வந்து சேரும்.

கடந்த காலத்தில் எல்லாம் பெண்கள் சமையறையில் உள்ள அரச்சாமான் என்று சொல்லக்கூடிய மளிகை சாமான்கள் வைத்திருக்கும் டப்பாக்களில் எல்லாம் பணம் வைத்திருப்பார்கள். அவர்களின் பாதுகாப்பிற்க்கு என்று இதனை செய்தாலும் அது அந்த வீட்டிற்க்கு செல்வத்தை கொடுப்பதால் இதனை நீங்களும் செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: