Followers

Friday, August 2, 2019

ஆத்மசாந்தி பூஜை


வணக்கம்!
          ஆத்மசாந்தி பூஜை செய்தபொழுது நிகழ்ந்த கருத்துக்களை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன். இதனை நம்புவது கஷ்டமாக இருந்தாலும் உங்களோடு பகிர்ந்துக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது அதனால் இதனை பகிர்ந்துக்கொள்கிறேன்.

பல ஆத்மாக்கள் மறுபிறவி எடுத்து இருக்கின்றது என்பதை சொல்லவேண்டும். நாம் இதற்க்கு செய்யும்பொழுது அவர்களின் தற்பொழுது உள்ள வாழ்வு சிறக்கவும் செய்யும். கண்டிப்பாக அந்த ஆத்மாக்கள் உங்களை வாழ்த்தும்.

ஒரு சில ஆத்மாக்கள் இறக்கும்பொழுது பட்டினியில் கிடந்து இறந்து இருக்கின்றது. இன்றைக்கும் பல வீடுகளில் நடக்கும் சம்பவமாக இது இருந்தாலும் நமது நண்பர்கள் கொடுத்த விசயத்தை வைத்து செய்யும்பொழுது சோறு போடாமலேயே இருந்து இருக்கின்றனர்.

ஏதோ ஒரு விதத்தில் இந்த குற்றம் உங்களையும் பின்தொடர்கின்றது. யார் என்பதை நான் வெளியில் சொல்லவில்லை நீங்கள் கொடுத்த நபர்களின் உண்மை தன்மை அதாவது அவர்களின் வாழ்க்கை கடைசி காலத்தில் எப்படி சென்றது என்பதை நீங்கள் நினைத்து பாருங்கள் நான் சொல்லுவது உங்களுக்கு புரியும்.

என்னால் முடிந்தளவுக்கு இதற்கு எல்லாம் செய்து இருக்கிறேன். நாம் தற்பொழுது அனுபவிக்கும் கஷ்டங்களுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என்பது தெரிகின்றது. முடிந்தவரை நண்பர்களே உங்களின் வீட்டில் இருக்கும் வயதானவர்களை நன்றாக கவனிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

விரைவில் அம்மன் பூஜை நடைபெறுவதால் காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வைக்கலாம். ஆடி மாதம் என்பதால் அனைவரும் இதில் பங்குக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: