Followers

Monday, August 26, 2019

தீயகிரகத்திற்க்கு எளிய பரிகாரம்


வணக்கம்!
          ஒருவருக்கு கெடுதல் தசா அல்லது ஏழரைசனி காலக்கட்டங்களில் அவரால் இரவில் தூங்கமுடியாது. இரவில் தூங்கம் இன்றி தவிப்பார்கள். இரவில் ஒழுங்கான தூக்கம் இல்லாமல் அவர்களுக்கு நோய்வருவதற்க்கும் வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்து விடும்.

பனிரெண்டாவது வீடு தூக்கத்தைப்பற்றி தெரிவிக்கும் வீடாக இருந்தாலும் பலருக்கு தீயகிரகத்தின் காலக்கட்டத்தில் இந்த வீட்டின் குணத்தையும் கொடுத்துவிடுகின்றது. தூக்கம் இல்லாமல் தவித்து அதனாலேயே மருத்துவமனையில் தங்ககூடிய வாய்ப்பும் உருவாகும்.

உங்களுக்கு மன நிம்மதியின்றி அதனால் தூக்கம் வராத ஒரு நிலையையும் உருவாக்கிக்கொடுப்பது இந்த தீயகிரகத்தின் காலக்கட்டங்களில் தான் உருவாகிவிடுகின்றது. தீயகிரகத்தின் காலக்கட்டத்தில் மற்றும் பனிரெண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு செயல்படும் கிரகங்களின் காலக்கட்டத்திலும் இது நடைபெறுகின்றது.

இதற்கு பரிகாரம் என்பதை சொன்னாலும் இதனைவிட பழக்கவழக்கத்தில் ஒன்றை செய்யவேண்டும். இரவு பனிரெண்டு மணிவரை ஏதாவது ஒரு புத்தகத்தை நீங்கள் படித்துக்கொண்டு இருக்கவேண்டும் அதன்பிறகு தூங்கினால் உங்களுக்கு தூக்கம் வரும்.

பனிரெண்டு மணி வரை என்பது உங்களின் உடல்நிலை பொறுத்து பார்த்துக்கொள்ளுங்கள். புத்தகம் என்பது ஏதாவது ஞானிகளின் புத்தகமாக இருந்தால் நன்றாக இருக்கும் அதனை படிப்பது இல்லை என்றால் உங்களுக்கு பிடித்த புத்தகத்தை படித்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: