Followers

Thursday, August 8, 2019

எதார்த்தம்


வணக்கம்!
          இலவச சோதிட ஆலோசனைக்கு நிறைய ஜாதகங்கள் வந்து குவிந்து கிடக்கின்றது. ஒவ்வொருவருக்கும் நல்ல நேரம் ஒதுக்கி அவர்களோடு பேசுவதால் கொஞ்சம் காலம் எடுக்கின்றது. அனைத்து ஜாதகங்களையும் நான் பார்த்துவிடுவேன். அவசரப்பட்டுக்கொண்டு போன் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். பொறுமையாக இருக்க அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

ஜாதகத்தில் உள்ள பிரச்சினை என்பதை தாண்டி ஒருவர் எப்படி நடந்துக்கொள்கின்றார் என்பதை பொறுத்தும் அவர்களுக்கு நன்மை நடக்குமா அல்லது தீமை நடக்குமா என்று தெரிந்துக்கொள்ளலாம். முதலில் ஒன்றை தெரிந்துக்கொள்ளவேண்டும். என்ன என்றால் இந்த காலத்தில் நல்லவர்களை விட கெட்டவர்கள் நல்ல வாழ்கின்றார்கள்.

என்ன நீங்களே இப்படி சொல்லுகின்றீர்கள் என்று கேட்கலாம். நன்றாக பார்க்கபோனால் நல்லவர்களை விட கெட்டவர்கள் நல்ல வாழ்வார்கள். நான் நல்லவனாக இருப்பதற்க்கு பதில் கெட்டவனாகவே மாறிக்கொள்கிறேன் என்று மாறிவிடாதீர்கள். 

ஒருத்தர் தன்னுடைய வாழ்நாளில் நல்லவர்களாக இருந்தால் சிரமம் அதிமாக தான் இருக்கும் ஆனால் அவர்களின் வாரிசுகள் நன்றாக வாழ்வார்கள். கெட்டவர்களுக்கு ஒரு பிரச்சினை வந்தால் அதனோடு அவன் அழிவது போலவே இருக்கும். நல்லவர்களுக்கு தினமும் பிரச்சினை வந்தாலும் அவன் வாழ்வதற்க்கு அவனை தயார் செய்கின்றது என்பதாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஆன்மீகத்தில் இருந்தால் இன்னமும் அதிக பிரச்சினை வரும் அதனை தாண்டியும் அவன் கஷ்டப்பட்டு இருந்துவிட்டால் அவனின் அத்தனை வாரிசுகளும் காலம் காலமாக புண்ணியம் சேர்த்துக்கொண்டே போவான் என்று எடுத்துக்கொள்ளலாம்.

அம்மன் பூஜை விரைவில் நடைபெற இருப்பதால் காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வைக்கலாம். ஆடி மாத அம்மன் பூஜையாக இருப்பதால் அனைவரும் கலந்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: