Followers

Saturday, August 24, 2019

குரு



வணக்கம்!
          ஜாதககதம்பத்தில் பதிவுகள் குறைந்துவிட்டன என்று எனக்கு கவலை ஏற்பட்டது உண்டு அதே நேரத்தில் நம்முடைய அம்மன் கோவில் கட்டும்பணியில் கவனம் செலுத்தி வந்த காரணத்தால் பதிவுகள் பக்கம் கவனத்தை செலுத்தவில்லை. அம்மன் கோவில் கட்டும் பணி நல்லவிதமாக செல்கின்றது. இனிமேல் பதிவுகளும் தொடர்ச்சியாக எழுதுகிறேன்.

நம்முடைய நல்ல முயற்சிக்கு அனைத்து நண்பர்களும் உதவுகின்றனர். பலர் இதற்காக உழைக்கின்றனர். இதுவே மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். அடிக்கடி அவர்களுக்கு நன்றி சொல்லுவது எனது கடமை என்பதால் இதனை சொல்லுகிறேன்.


குரு கிரகத்தைப்பற்றி பார்க்கலாம். குரு கிரகம் ஒரு சுபக்கிரகம் என்று சொல்லுவார்கள். ஒரு ஜாதகத்தில் குரு கிரகம் மட்டும் நன்றாக இருந்தால் அவர்க்கு மற்ற கிரகத்தின் பலன் இல்லாமல் இருந்தால் கூட அவர் வெற்றி பெற்றுவிடுவார்.

ஒரு சோதிடர் அல்லது ஒரு ஆன்மீகவாதியை நாம் சந்தித்தால் அவரால் நமக்கு நல்லது நடக்கின்றது என்றால் அது எதனால் என்றால் அவர் குருவாக நமக்கு இருந்து ஆசியை கொடுக்கின்றார். அவரின் ஆசியும் குருகிரகத்தின் ஆசியும் ஒன்றாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.

உங்களின் ஜாதகத்திலும் குரு கிரகம் நன்றாக இருந்தால் இந்த ஆசி உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். குரு கிரகம் சரியில்லை எனும்பொழுது உங்களை எப்படிப்பட்டவர் ஆசி கொடுத்தாலும் அது முழுமையாக கிடைக்காது. குறைவாக உங்களுக்கு கிடைக்கும்.

குருவின் பலம் கிடைக்க தான் நாம் நிறைய தேடவேண்டும். இந்த தேடுதலை நீங்கள் சரியாக செய்துவிட்டால் நீங்கள் பாக்கியசாலி. அவர் கிடைத்து நீங்கள் வெற்றிப்பெற்றுவிடலாம். குரு தசா புதன் புத்தியில் கண்டிப்பாக ஒரு நல்ல குரு உங்களுக்கு கிடைப்பார். இதில் நிறைய குரு தசா நண்பர்கள் இருப்பதால் அவர்களுக்கு பயன்பெறட்டும் என்று எழுதுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: