Followers

Monday, August 5, 2019

வடக்கு பார்த்த வீடுகள்


வணக்கம்!
          அனுபவத்தில் நாம் பார்க்கும்பொழுது வடக்கு வாசல் பார்த்த வீடுகள் வாழ்வது போல பிற வாசல் பார்த்த வீடுகள் வாழ்வதில்லை. வாஸ்து படி சொன்னார்கள் என்றால் கிழக்கு மற்றும் வடக்கு பார்த்த வாசல் என்பது முதல் தரம் என்பார்கள். இதில் வடக்கு பார்த்த வாசல்கள் தான் முதல் தரமாக எடுத்துக்கொள்ளவேண்டும்.

நாம் வாஸ்து பார்த்து கணித்த கணிப்பு இது கிடையாது அனுபவத்தில் நிறைய பேரை பார்த்து அதன் வழியாக உங்களுக்கு சொல்லுகிறேன். வடக்கு பார்த்த வீடுகளுக்கு செல்வ செழிப்பு மற்றும் அவர்களின் வாழ்நாட்களில் அவர்கள் இருக்கும் புகழுக்கு நிகரில்லை என்று சொல்லலாம்.

பழைய காலத்தில் தெற்கு பார்த்த வீடுகளுக்கு தான் மவுசு அதிகமாக இருந்தது. தெற்கு பார்த்த வீடுகள் கட்டினால் அதற்கு தென்றல் காற்று வீசும் அதன் வாங்கிக்கொண்டு இருக்கலாம் என்று இருந்தார்கள். தற்பொழுது இது எல்லாம் அந்தளவுக்கு மக்கள் விரும்பவில்லை.

தெற்கு பார்த்த வீடுகளில் உள்ளவர்கள் வாழவில்லையா என்று கேட்கலாம். தெற்கு பார்த்த வீடுகளில் உள்ளவர்கள் வாழ்வார்கள் ஆனால் அவர்களுக்கு நல்ல காலம் இருக்கும் வரை தான் வாழ்வார்கள். கெட்டகாலம் வந்துவிட்டால் அவர்களின் வாழ்வு தரம் குறைந்துவிடும்.

வடக்கு பார்த்த வீடுகளுக்கு கெட்டகாலம் வந்தால் கூட அவர்களுக்கு ஏதோ ஒன்று அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக்கொண்டே சென்றுக்கொண்டு இருக்கும். எந்த இடத்தில் நின்றாலும் அவர்கள் உடனே அதில் இருந்து மீண்டு சென்றுவிடுவார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: