Followers

Friday, August 2, 2019

வீடு


வணக்கம்!
         பல வருடங்களாக தொடர்ந்து வரும் நண்பர்களுக்கு நாம் பரிந்துரை செய்யும் கருத்தாக இருப்பது நீங்கள் ஒரு வீடு கட்டவேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்று சொல்லுவது உண்டு. பலருக்கு என்னுடைய வேண்டுதல் அவர்களுக்கு எப்படியும் ஒரு வீடு கிடைத்துவிடவேண்டும் என்று இருக்கும்.

மறைமுகமாகவே இந்த வேண்டுதலை வரும் நண்பர்களுக்கு வைத்துவிடுவேன். தொடர்ச்சியாக நம்மை நோக்கி வரும் நண்பர்களுக்கு நம்மால் முடிந்த நிறைய ஆன்மீகவிசயங்களை அவர்களுக்கு என்று செய்துக்கொடுப்பது உண்டு.

எந்த வித பணத்தின் நோக்கம் இல்லாமல் அவர்களுக்கு நல்ல வீட்டை நாம் நமது வழியில் அமைத்துக்கொடுக்கவேண்டும் என்று இதனை செய்து இருக்கிறேன். அனைவரும் எனக்கு நன்கு தெரிந்தவர்கள் அவர்களின் வாழ்க்கைக்கு நான் பொறுப்பேற்று இதனை செய்துக்கொடுத்து இருக்கிறேன்.

வரும்காலத்தில் இதனை தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன். ஏன் என்றால் இன்றைய காலத்தில் வீடு வாங்குவது என்பது ஒரு லாபம் அற்ற முதலீடு என்று நினைக்கிறேன். பெரியதாக லாபம் என்பது இருக்காது என்று நினைக்கிறேன். ஒரு கோடி இரண்டு கோடி என்று பணத்தை போட்டு அதில் இருந்து பெரியதாக ஒன்றும் கிடைக்க போவதில்லை என்பது போலவே இருப்பதால் இதனை தவிர்க்க நினைத்து இருக்கிறேன்.

உங்களுக்கு எது நல்ல முதலீடாக இருக்கும் என்பதை உங்களின் நிதி ஆலோசகரை கலந்து ஆலோசித்துவிட்டு அதில் உங்களின் முதலீடுகளை போடுங்கள். பெரியளவில் பணத்தை போட்டு வீட்டை வாங்கவேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: