Followers

Sunday, August 25, 2019

குருவின் பார்வை


வணக்கம்!
          குருகிரகத்தின் சுபபார்வை என்பது மிகவும் சுபிட்ஷமான ஒன்று என்று அனைவருக்கும் தெரியும். இந்த சுபகிரகத்தின் பார்வை எந்த இடத்தில் பட்டால் அது நல்லது என்பதை பார்க்கலாம். 

குரு கிரகத்தின் பார்வை தீயகிரகத்திற்க்கு படவேண்டும். தீயகிரகத்திற்க்கு குருவின் பார்வைபடும்பொழுது அதன் தாக்கம் வெகுவாக குறைந்துவிடும். ஒருவருக்கு ஒரு தீயகிரகத்தால் உடல்நிலை நோய்வாய்ப்படும்பொழுது அந்த காலக்கட்டத்தில் குருவின் பார்வை தீயகிரகத்திற்க்கு பட்டால் அந்த நேரத்தில்  அந்த நோயில் இருந்து விடுபடுவார் என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.

குருவின் பார்வை சுபதன்மை உள்ள வீட்டிற்க்கு படும்பொழுது அந்த வீட்டின் தன்மையை பொறுத்து அதற்க்கு தகுந்த சுபநிகழ்ச்சிகளை கொடுக்கும். ஏழாவது வீட்டிற்க்கு கிடைத்தால் திருமண நிகழ்வுகள் நடக்கும்.

நல்ல வீட்டிற்க்கு குரு பார்வை கிடைப்பதை விட தீயவீட்டிற்க்கு குரு பார்வை கிடைத்தால் அந்த பார்வையால் நமக்கு நன்மை கிடைக்கும். குருவின் பார்வை சுபவீட்டிற்க்கு கிடைக்கும்பொழுது அதிகமான நன்மை என்பதை விட அது குறைவான நன்மை என்றே எடுத்துக்கொள்ளலாம்.

இலவச சோதிட ஆலோசனை கேட்ட நண்பர்களுக்கு புதன்கிழமைக்குள் தங்களுக்கான பலனை கொடுத்துவிடுவேன். உங்களை புதன்கிழமைக்குள் கூப்பிடவில்லை என்றால் புதன்கிழமைக்கு பிறகு என்னை கூப்பிட்டு கேட்டுக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: