Followers

Saturday, August 3, 2019

பாவமும் புண்ணியமும்


வணக்கம்!
          நேற்று தந்த ஆத்மசாந்தி பூஜை பதிவை படித்துவிட்டு பலர் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். என்னால் இவரை கவனிக்கமுடியவில்லை அதனால் எனக்கு பாவம் வந்து சேருமா என்று கேட்டனர். 

இன்றைய வாழ்க்கை ஒரு பரபரப்பான ஒரு வாழ்க்கையாகவே இருக்கின்றது. பலர் தங்களின் கடமையை நிறைவேற்ற தவறிவிடுகின்றனர். என்ன தான் பரபரப்பான ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் நமது கடமை என்பதை நன்கு சிந்தித்து அதற்கு தகுந்தார் போல் செயல்படவேண்டும்.

பாவமும் புண்ணியமும் கலந்து தான் மனிதன் பிறப்பான். நாம் கொஞ்சம் விழிப்புணர்வோடு செயல்படுவதால் அனைத்து கடமையையும் இழுத்துபோட்டு செய்யவேண்டும். உங்களின் தாய் தந்தையை விட்டுவிடகூடாது. உங்களின் வீட்டில் பெரியோர்கள் யார் இருந்தாலும் விட்டுவிடகூடாது. அவர்களை பரபரப்பான சூழ்நிலையில் நீங்கள் கவனித்தால் கண்டிப்பாக அது தான் சிறந்த ஒன்றாக இருக்கும்.

பாவமும் புண்ணியமும் என்பது இதுவரை நீங்கள் முற்பிறவியில் பெரியோர்களை கவனிக்க தவறிய விட்ட கடமையால் பாவம் இருக்கும். அந்த பாவத்தை எல்லாம் இந்த பிறவியில் இருக்கும் பெரியோர்களுக்கு நீங்கள் செய்யும்பொழுது அது புண்ணியமாக இருக்கும்.

உங்களுக்கு இதுவரை நடந்தவிசயங்களை எல்லாம் விட்டுவிட்டு உங்களின் நீங்கள் அனைத்து கடமையும் செய்பவர்கள் என்று நீங்கள் நினைத்துக்கொண்டு செயல்படுங்கள். அனைத்திலும் உங்களுக்கு மதிப்பும் கூடும் உங்களின் வாழ்க்கையும் சிறக்கும்.

பலர் இந்த அமாவாசையை தவறவிட்டுவிட்டார்கள். அடுத்த அமாவாசையில் இந்த பூஜையில் கலந்துக்கொள்ளலாம். புரட்டாசி மாத அமாவாசையில் இதனை செய்வோம் அப்பொழுது இலவசமாக செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: