Followers

Monday, September 30, 2019

வாரிசுகளுக்கு புண்ணியம்


வணக்கம்!
          நவராத்திரி அம்மன் யாகம் மற்றும் பூஜைகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. நவராத்திரி அம்மன் யாகம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்புக்கொள்ளவும்.

நம்முடைய ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் என்பது நமது வாரிசைக்காட்டிக்கொடுக்ககூடிய ஒரு இடம் என்பது உங்களுக்கு தெரியும் அதே நேரத்தில் இன்றைய ஜென்மத்தில் நீங்கள் நல்லதை செய்யும்பொழுது மட்டுமே உங்களின் வாரிசுகள் நன்றாக இருக்கும்.

இந்த காலத்தில் வாரிசுகளுக்கு சொத்து சேர்க்கவேண்டும் என்று பலர் போராடுகின்றனர். அதே நேரத்தில் சொத்து சேர்க்கும்பொழுது அது நல்லவழியில் தான் சேருகின்றதா என்பதையும் கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள்.

பலர் சொத்து சேர்க்கும்பொழுது கண் தெரியாமல் சம்பாதிக்கின்றனர். பாவத்தில் சொத்தை சேர்க்கும்பொழுது நமக்கு சந்தோஷமாக தெரியும். வாரிசுகள் கஷ்டப்படும்பொழுது தான் நமக்கே புரியவரும். பெரும்பாலான பணக்காரர்களின் வாரிசுகள் வீணாக போய்விடுகின்றனர்.

பணம் சம்பாதிக்கவேண்டாம் என்பதில்லை அதோடு சேர்ந்து நிறைய புண்ணியத்தையும் சேர்த்தால் நல்லது. பணம் காப்பாற்றுகின்றதோ இல்லையோ உங்களின் புண்ணியம் கண்டிப்பாக உங்களின் வாரிசுகளை காப்பாற்றும்.

உங்களின் ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் எப்படி பாதிக்கபட்டாலும் சரி நீங்கள் விபரமாக செயல்பட்டால் பூர்வபுண்ணியத்தை சரி செய்துக்கொள்ளமுடியும். உங்களின் ஒய்வு நேரத்தில் தர்ம சிந்தனையோடு எந்த காரியத்தை எல்லாம் செய்யலாம் என்பதை பார்த்து செய்துக்கொண்டே இருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: