Followers

Tuesday, November 6, 2012

ஆன்மீக அனுபவங்கள் 16



வணக்கம் நண்பர்களே ஆன்மீக அனுபவத்தில் ஒரு சக்தியை எடுப்பது பற்றி சொல்லிக்கொண்டு வந்தேன். பல நண்பர்கள் கேட்டார்கள் ஒன்றை எடுத்த பிறகு அடுத்து ஒரு சக்தியை எடுக்கலாமா என்று கேட்டார்கள்.

உங்களுக்கு ஒரு சக்தியின் துணை கிடைத்துவிட்டாலே போதும் அதனை வைத்து கொண்டு நாம் முன்னேறிவிடலாம். சில நேரங்களில் நமக்கு வேறு ஒரு சக்தியின் துணை தேவைப்படும். அப்பொழுது உங்கள் சக்தியின் துணைக்கொண்டு வேறு சக்தியை எடுத்துக்கொள்ளலாம் இது எல்லாம் என்னை மாதிரி சோதிட தொழில் செய்பவர்களுக்கு தேவைப்படும். நீங்கள் சாதாரணமாக ஆன்மீக விசயத்தில் ஈடுபடுவதற்க்கு ஒன்றே போதும். அதனை வைத்து அனைத்தையும் சரி செய்துக்கொள்ளலாம்.

நீங்கள் முதலில் ஒரு சக்தியை எடுத்து வந்தால் இந்த தொடரின் அடுத்த அத்தியாத்திற்க்கு செல்லலாம் என்று நினைத்தேன் ஆனால் யாரும் எடுக்கவில்லை ஏன் என்றால் இதன் அடுத்த பகுதியை தொட்டால் ஒவ்வொரு தொடரும் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பீர்கள் அந்தளவுக்கு சுவாராசியம் நிறைந்தது.

அடுத்த கட்டத்திற்க்கு நாம் செல்லும் போது தான் தன்னுடைய உடலை எப்படி எல்லாம் கட்டுபடுத்தாலும் அதன் மூலம் என்ன செய்யலாம் என்பதை எல்லாம் பார்க்கலாம். யாரும் அப்படி எடுத்துக்கொண்டு என்னை தொடர்பு கொள்ளவில்லை நான் என்ன செய்வது எதிர்பார்ப்பு இருந்தால் தானே எழுதலாம்.

நாம் நல்ல சக்தியை எடுப்பது மாதிரி மாந்தீரிகத்திலும் சக்தியை எடுப்பார்கள்.அது எல்லாம் தீயசக்திகளாக இருக்கும். சில தீய ஆத்மாக்களையும் எடுப்பார்கள். அதற்கு எல்லாம் சாப்பாடு கொடுத்து வைத்துக்கொள்ளுவது கடினமான ஒன்று. 

கேரளாவில் குட்டிச்சாத்தான் என்று ஒரு சக்தியை எடுப்பார்கள். அதற்கு நைவேத்தியமாக பன்றியின் இரத்தத்தை பொரியில் கலந்து கொடுக்க வேண்டு்ம் இந்த மாதிரி நிறையவே உள்ளது அதை எல்லாம் மாந்தீரீகம் என்ற தொடர் ஆரம்பித்து அனைத்தையும் பார்க்கலாம்.

இவர் என்னடா மாந்தீரிகத்தை பற்றி எல்லாம் சொல்லுகிறார் என்று நினைக்க தோன்றும். அனைத்தையும் கற்க வேண்டும் என்ற ஒரு ஆவல் இருந்தது அந்த ஆவலை பூர்த்தி செய்வதற்க்காக அதனை கற்றேன். எனக்கு எதிரி எல்லாம் யாரும் கிடையாது.  பரிகாரம் மாந்தீரிகத்தில் செய்தால் உடனே பலன் கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: