Followers

Monday, November 19, 2012

ஆன்மீக அனுபவங்கள் 24



வணக்கம் நண்பர்களே !
                   நமது நண்பர்கள் அனைவரும் குரு கிடைக்கவில்லை என்று சொல்லிருந்தீர்கள். எனக்கும் அது கவலையாகதான் இருந்தது அதனால் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அதனை உங்களிடம் பகிர்த்துக்கொள்ள விருப்படுகிறேன்.

திருவண்ணாமலையில் இந்த மாதம் கார்த்திகை தீபம் வருகிறது. இந்த தீப திருநாள் அன்று ஏகாப்பட்ட பக்தர்கள் வருவார்கள். இதில் கலந்துக்கொள்வதற்கே புண்ணியம் செய்து இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இந்த தீபத்திற்க்கு மக்களோடு மக்களாக பல சாமியார்களும் வருகிறார்கள். அவர்களை நீங்கள் தொடர்புகொண்டால் நீங்கள் தேடிய குரு அங்கு கிடைக்கலாம்.

பொதுவாக அவ்வளவு எளிதில் அவர்களை நீங்கள் அடையாளம் காண்பது அரிது ஆனால் அந்த அண்ணாமலையான் புண்ணியத்தில் உங்களுக்கு கிடைப்பதற்க்கு வாய்ப்பு இருக்கிறது.

நீங்கள் பக்தியுடன் அந்த அண்ணாமலையாரை அணுகும் போது உங்களுக்கு அந்த அண்ணாமலையார் ஏதாவது ஒரு நல்லவழியை காட்டுவார். நம்பிக்கையுடன் தேடுங்கள் அதற்க்கான வழி அங்கு இருக்கிறது. எனக்கு தெரிந்த பல சாதுக்கள் அங்கு செல்லுவதாக சொல்லியுள்ளார்கள்.

நீங்கள் குருவை அடைவதற்க்கான பல வழிகளை நான் ஆன்மீக அனுபவத்தில் சொல்லியுள்ளேன். அதனை நீங்கள் கருத்தில் கொண்டு தேடும்போது கண்டிப்பாக குரு உங்களுக்கு கிடைப்பார்.

உங்களுக்கு ஒரு குரு கிடைத்துவிட்டாலே போதும் நீங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை சந்திக்கலாம். உங்களின் பிரச்சினை தீர்ந்து விடும். ஏதோ நான் சந்தியாச வாழ்க்கைக்கு குரு தேடுங்கள் என்று சொல்லவில்லை உங்களின் அன்றாட பிரச்சினைக்கு தேடுங்கள்.

"உங்களுக்கு குரு கிடைப்பதற்க்கு எனது வாழ்த்துக்கள்"

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.




No comments: