Followers

Tuesday, November 6, 2012

ஆன்மீக அனுபவங்கள் 17



வணக்கம் நண்பர்களே ஆன்மீக அனுபவத்தை படித்துவிட்டு பல பேர் என்னுடன் போனில் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள் என்று ஏற்கனவே சொன்னேன். அவர்கள் தொடர்ந்து கேட்கும் கேள்வி நீங்கள் இதை மட்டும் எழுதினால் மட்டும் போதாது நீங்கள் எங்களுக்கு கற்றுககொடுங்கள் என்று கேட்கிறார்கள்.

நீங்கள் கேட்பது சரியான கேள்வியாக தான் இருக்கிறது ஆனால் நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன் என்னால் அதை கற்று தர முடியாது என்று சொல்லியுள்ளேன் அதற்கான காரணத்தையும் உங்களுக்கு விளக்கியுள்ளேன். 

நீ்ங்கள் அனைவரும் கேட்ட காரணத்தால் ஏற்கனவே சொல்லியுள்ளேன் நீங்கள் ஒரு சக்தியை எடுத்துக்கொண்டு வாருங்கள் அதன் பிறகு நான் சொல்லிதருகிறேன் என்று சொன்னேன் அதற்கும் யாரும் வரவில்லை. நீங்கள் ஒரு சக்தியை எடுத்துக்கொண்டு வந்த பிறகு உங்களுக்கு சொல்லிதருவதும் ஒரு கடினமான வேலை தான் இருக்கும் அப்படி இருந்தும் உங்களுக்காக ஒத்துக்கொண்டேன். யாரும் வரவில்லை என்ன காரணம் என்றும் தெரியவில்லை?  யாரும் எதுவும் எடுக்கவில்லை என்று நினைப்பதா அல்லது இவனுக்கிட்ட போய் நாம் கற்றுக்கொள்வதாவது என்று நினைக்கிறீர்களா என்று தெரியவில்லை.

என்னிடம் இருக்கின்ற விசயங்களை என்னிடம் வந்து கற்பவர்க்கு மட்டும் தான் அனைத்தும் தரமுடியும்.இதை ஒருவருக்கு மட்டும் தருவதாக ஏற்கனவே சொல்லிவி்ட்டேன்.

சில நண்பர்கள் நீங்கள் அமைதியாக அமரும் படி சொல்லியுள்ளீர்கள் இது தியானம் தானே என்று கேட்டார்கள் உண்மை தான் அப்பொழுது மட்டும் உங்களால் என்ன நடக்கிறது என்று உங்களை உற்று நோக்கமுடியும். இதுவும் யோகா தியானம் எல்லாம் சேர்ந்தது தான் இதனைப்பற்றி எழுதும் போது உங்களுக்கு புரியவரும்.

பல தளங்களில் பல மந்திரங்களை சொல்லி தருகிறார்கள் அவர்கள் சொல்லுவதை அனைவரும் செய்துக்கொண்டும் இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த சக்தி கிடைத்து இருக்க வேண்டும்.அப்படி இருப்பவர்களும் கற்றுக்கொள்ளலாம். 

ஒரு சில நண்பர்கள் கேட்டார்கள் நீங்களும் ஒரு மந்திரத்தை சொல்லி அதனை செய்ய சொல்லுங்கள் என்று கேட்டார்கள் எனக்கும் ஆசை தான் ஆனால் மக்களை முட்டாளாக்க நான் விரும்பவில்லை. ஒன்று கற்று கொடுத்தாலும் அதை கொண்டு அவன் முன்னேற வேண்டும் என்று நினைப்பவன். ஒரு தவறானவற்றை ஒருபோதும் செய்யகூடாது. 

பல வழிபாட்டு முறைகளை எல்லாம் செய்தவன் தான் நான் ஆனால் ஒருவன் ஒரு சக்தியை எடுத்த பிறகு செய்யும் வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடாக இருக்கும் அவர்கள் சொல்லுவதை குறிப்பிட்ட நேரத்தில் அந்த சக்தி மூலம் நடைபெறும்.

பார்க்கலாம் ஏதாவது ஒரு வழியை ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி தரும் அப்பொழுது உங்களுக்கு சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: