Followers

Thursday, November 15, 2012

திருமணமும் பித்ருதோஷமும்



வணக்கம் நண்பர்களே !
                                      இப்பதிவில் திருமண வாழ்வில் பித்ரு தோஷம் ஏற்பட்டால் எப்படி பிரச்சினை உருவாக்கும் என்பதை பார்க்கலாம்.

மூன்றாம் வீட்டில் ராகு இருந்தால் ஒன்பதாம் வீட்டில் கேது இருப்பார். மூன்றாம் வீட்டில் கேது இருந்தால் ஒன்பதாவது வீட்டில் ராகு இருப்பார் இப்படி இருந்தால் கடுமையான பித்ரு தோஷத்தை ஏற்படுத்தும்.

பாக்கிய ஸ்தானத்தில் ஒரு தீயகிரகம் இருந்தால் பித்ரு வழியில் அதாவது தந்தை வழியிலும் பிரச்சனையை திருமணத்தில் ஏற்படுத்தும் அமைப்பாக இருக்கிறது. 

உங்களின் தந்தை கெட்டுவிடுவார் அல்லது தந்தை இறந்துவிடுவார். தந்தை மூலம் உங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது. தானே முயன்று திருமணத்தை நடத்துவது என்பது எவ்வளவு கடினமான ஒன்றாக தானே இருக்கும் அதனால் இதனை சொல்லிருப்பார்கள். 

இந்த தோஷம் இருந்தால் ஒன்று உங்களின் தந்தையை கெடுக்கும் அப்படி இல்லை என்றால் உங்களின் எந்த செயலுக்கும் தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் நீங்கள் எந்த முயற்சி செய்தாலும் அதில தடை ஏற்பட்டு மனதில் எரிச்சலை ஏற்படுத்தும் அதனால் திருமண வாழ்வில் பாக்கிய ஸ்தானம் என சொல்லக்கூடிய ஒன்பதாவது வீடும் கெடுதல் அடைதல் கூடாது.

நமக்கு இருக்கும் பாக்கியத்தை காட்டக்கூடிய வீடாக இருப்பதால் திருமண வாழ்வும் நமக்கு கிடைத்த பாக்கியம் தானே எத்தனையே பேர் திருமண வாழ்வு கிடைக்கவில்லை என்று ஏங்குகிறார்கள் அல்லது திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்துவிடுகிறார்கள் அதனால் பாக்கியஸ்தானம் எனும் ஒன்பதாவது வீடும் திருமண வாழ்வில் முக்கியமாக பார்க்க வேண்டிய ஒன்று. 

பித்ரு தோஷம் ஏற்பட்டால் அந்த பித்ருக்களுக்கு தோஷ நிவர்த்தி செய்துக்கொண்டு திருமண வாழ்வில் இணையுங்கள் .பித்ரு தோஷத்திற்க்கு  இராமேஷ்வரம் சென்றால் கூட நல்ல பரிகாரம் தான் திருமணத்திற்க்கு முன்பு ஒரு முறை இராமேஷ்வரம் செல்லுங்கள் திருமணம் நடந்து முடிந்த பிறகு  தம்பதிகளாக இராமேஷ்வரம் சென்று தரிசித்துவிட்டு வாருங்கள் திருமண வாழ்க்கை நன்றாக அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.



No comments: