Followers

Thursday, November 15, 2012

பாவம் தீர பரிகாரம்



வணக்கம் நண்பர்களே!
                            இன்று பல பேர் வாழ்க்கையில் அதிகமாக பிரச்சினை இருக்கிறது என்ன செய்வது என்று தெரியவில்லை என்று கேட்கிறார்கள் எவ்வளவோ சோதிடர்களை சந்தித்து பரிகாரங்களை கேட்டு செய்தாலும் பலன் இல்லை என்ன செய்வது என்று புலம்புகிறார்கள் அதற்க்காகவோ இந்த பதிவு.

தானம் செய்வதால் உங்களின் பாவங்களை குறைக்கமுடியும் என்று சொல்லுகிறார்கள் நமது மதத்தில் நீ படுக்கையை விட்டு எழுந்தவுடனே தானம் செய்வது போல் தான் நமது முன்னோர்கள் வைத்திரு்கிறார்கள் ஆனால் நாம் அதனை எல்லாம் விட்டுவிட்டு தினமும் பாவத்தை ஏற்றிக்கொண்டு அல்லல்படுகிறோம்.

அந்த காலத்தில் காலையில் எழுந்தவுடன் வீட்டை வாசலை பசுவின் சாணத்தை கொண்டு சுத்தம் செய்து அரிசி மாவினால் கோலமிடுவார்கள். பசுவின் சாணம் கிருமி நாசினி வீட்டிற்க்குள் எந்த கிருமியும் வராது. அரிசின் மாவினால் கோலமிட்டால் அந்த கோலத்தை எறும்புகள் வந்து தின்றும் அதனால் நமது பாவங்கள் குறையும். நீங்கள் எழுந்தவுடனே ஒரு தர்மத்தை செய்து கொண்டுவிட்டீர்கள் உங்களுக்கு அந்த நாள் முழுவதும் நல்லது நடக்கும் அதனை கருத்தில் கொண்டு அந்த காலத்தில் இதனை வைத்தார்கள்.

இன்று நாம் படுக்கையை விட்டு எழுவதே காலம் தாழ்த்தி தான் அப்படியே எழுந்துவிட்டாலும் கோலம் எல்லாம் யார் போடுகிறார்கள். அந்த கோலமும் அரிசி மாவினால் போடுவது கிடையாது. உங்களின் பாவங்களின் கணக்கு கூடிக்கொண்டே செல்லுகிறது.

இன்று வீடுகள் எல்லாம் நல்ல முறையில் கட்டப்படுகிறது பசுவின் சாணத்தை போடமுடியாது அதற்கு என்ன செய்யலாம் உங்களின் வீட்டின் வாயிலில் தண்ணீரில் மஞ்சளை கலந்து தெளித்து அரிசி மாவினால் கோலம் போடுங்கள். மஞ்சள் கிருமி நாசினி அரிசி மாவினால் கோலம் போடும் போது அதனை எறும்புகள் வந்து தின்றும் இதனால் உங்களின் பாவங்கள் வெகுவாக குறைக்கப்படும். இதனை நீங்கள் தினமும் உங்களின் வீடுகளில் கடைபிடியுங்கள்.இதனை கொஞ்ச காலங்கள் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் நல்ல வாழ்க்கை அமையும்.

எழுந்தவுடனே தர்மம் செய்து எவ்வளவு உயர்ந்த செயல் உங்களின் பாவங்கள் தீர ஒரு நல்லவழியை சொல்லிருக்கிறேன். தர்மம் செய்து உங்களின் வாழ்வை உயர்த்திக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: