Followers

Wednesday, November 14, 2012

சோதிட அனுபவம்



நித்தின் கட்காரி இவரைப்பற்றி பல நாளிதழ்களில் செய்தி வருவதற்க்கு காரணம் என்ன என்று அவருடைய ஜாதகத்தை வைத்துக்கொண்டு பார்க்கலாம்.

நித்தின் கட்காரிக்கு சொந்தமான நிறுவனங்களில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

இவருடைய லக்கினம் ரிஷபம். அதன் அதிபதி சுக்கிரன் லக்கனத்தில் அமர்ந்துள்ளார். இவரது ராசி மேஷம். அவருடைய ராசிக்கு ஏழில் சனி சென்றுக்கொண்டுள்ளது அது கண்டசனியாக செல்லுகிறது. இதுவும் பிரச்சினையை ஏற்படுத்தும். இவருக்கு பிரச்சினை வந்தது இவரின் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு.

வழக்கு என்று வநதால் அது ஆறாவது வீட்டு அதிபதி இல்லாமல் வருமா இவருக்கு இப்பொழுது நடைபெறுவது ராகு தசாவில் சுக்கிரன் புத்தி ஆரம்பம். ரிஷப லக்கனத்திற்க்கு ஆறுக்குடையவன் சுக்கிரன் லக்கனத்தில் அமர்நதுள்ளார். அவரின் புத்தியில் பிரச்சினை ஆரம்பம் எப்படி பிரச்சினை என்றால் ஆறுக்குடைய சுக்கிரன் சூரியனோடு அமர்நதுள்ளார் அரசாங்கத்தின் மூலம் இவர் பிரச்சினையை சந்திக்க வேண்டும்.

தசாநாதனாக இருப்பவன் ராகு. தசாநாதன் ராகுவும் ஆறாவது வீட்டில் அமர்நதுள்ளார் அப்புறம் என்ன பிரச்சினையை சந்தி்க்க வேண்டியது தான். இப்பொழுது அரசாங்கத்தின் வழியாக தான் பிரச்சினையை சந்தித்துக்கொண்டு இருக்கிறார்.


சனியின் பார்வையில் சூரியனும் சுக்கிரனும் இருக்கிறது கண்டிப்பாக பிரச்சினையை ஏற்படுத்தகூடிய அமைப்பு.

லக்கினாதிபதியாகவும் சுக்கிரன் வருகிறார் ஆறாவது வீட்டு அதிபதியாகவும் சுக்கிரன் வருகிறார் கண்டிப்பாக இவருக்கு ஏதாவது ஒரு நோய் இவருக்கு இருந்துக்கொண்டு இருக்கும். இவருக்கு பிரச்சினை என்பது சனி ஏழில் இருக்கிறது அதே நேரத்தில் சுக்கிரனின் புத்தியில் தான் பிரச்சினை வந்திருக்கிறது. 

லக்கினாதிபதியான சுக்கிரனே இவருக்கு பிரச்சினையை ஏற்படுத்துகிறது பாருங்கள். இந்த புத்தி முடிய இவர் பிரச்சினையை சந்திக்க வேண்டியது தான் நண்பர்களே எனக்கு தெரிந்த தகவல்களை வைத்து சிறியதாக தந்துவிட்டேன். உங்களின் பார்வையில் இந்த ஜாதகத்தின் பலனை தாருங்கள் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.



2 comments:

kalaiarasan kaliyaperumal said...

1.இரண்டாம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திருந்து சுய வர்க்கத்திலும் ஆறு பரல்களைக் கொண்டிருந்தாலும் ஜாதகனுக்கு வாழ்க்கையின் எல்லா செளகரியங்களும், சுகங்களும் கிடைக்கும். அதே நேரத்தில் ஏராளமான விரோதிகளும் இருப்பார்கள்.
2.இரண்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தால் அது செல்வத்திற்குக் கேடானது. செல்வம் இருக்காது. அப்படியே தேடிப் பிடித்தாலும் தங்காது அல்லது நிலைக்காது!

KJ said...

Sir, second and twelfth lord became parivarthana.. Sevvai and budhan. So no prob for money. Main prob is lagna is in paaba karthari yogam which include sun and sukran. That is main reason for this buthi is not good. Next surya buthi also will not be good for him. Sani is yoga karagan for his lagna. So he won't do bad for him. Pl correct if i said anything wrong.