Followers

Saturday, November 3, 2012

ஆன்மீக அனுபவங்கள் 14



வணக்கம் நண்பர்களே ஆன்மீக அனுபவத்தை படித்துவிட்டு ஒரு நண்பர் என்னிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார். நீங்கள் சொல்லுவது 75 சதவீதம் புரிகிறது. 25 சதவீதம் புரியவில்லை தெளிவாக ஒரு பதிவை தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார். அந்த நண்பர் என்னிடம் பேசும்போது இது எல்லாம் உண்மையாக இருக்குமா என்றும் கேட்டார். அவரின் மூலம் உங்களுக்கும் இதை சொல்லுகிறேன்.

யோகா தியானம் இதனை சொல்லாமல் ஏன் ஒரு சக்தியை எடுங்கள் என்று சொல்கிறேன் என்றால் நீங்கள் அனைவரும் சோதிட தாகம் உள்ளவர்கள் உங்களுக்கு நன்றாக தெரியும் உங்கள் ஜாதகம் மூலம் அனைத்து பிரச்சினைகளும வரும் என்று உங்களுக்கு நன்றாக தெரியும். நீங்கள் யோகா தியானம் எல்லாம் கற்றால் இந்த கிரகங்கள் தரும் பிரச்சினையில் இருந்து உங்களால் தப்பிக்கமுடியாது.

இந்த மாதிரி ஒரு சக்தியை எடுத்து விட்டு நீங்கள் யோகா எல்லாம் செய்யலாம் அதன் பிறகு நல்ல ரிசல்ட் இருக்கும். சும்மா யோகா செய்கிறேன் தியானம் செய்கிறேன் என்றால் உங்களுக்கு வரும் பிரச்சினைகளை சரி செய்ய முடியாது. ஏன் என்றால் கிரகங்களின் தாக்குதலை சமாளிக்க யோகா தியானம் எல்லாம் முடியாத காரியம். அதனை சமாளிக்கும் ஆற்றல் எல்லாம் இந்த மாதிரி சக்தியை எடுத்த பிறகு தான் உங்களுக்கு வரும். 

நான் யோகா, தியானம் செய்கிறேன் என்றால் நீங்கள் பிரம்மசாரியாக இருந்து கொண்டு செய்யுங்கள் அப்பொழுது உங்களுக்கு பிரச்சினை ஏற்படாது. பொதுவாக பிரம்மசாரிகளுக்கு கிரகங்களின் தாக்கம் இருக்காது. பிரம்மசாரிகள் தவறு செய்தால் கிரகங்கள் போட்டு தாக்கிவிடும்.

நீங்கள் சாமியாராக போகபோகிறேன் என்றால் நீங்கள் செய்ய வேண்டியது யோகா கற்றுக்கொள்ளுங்கள். தியானம் கற்றுக்கொள்ளுங்கள் எங்கேயாவது போய் உட்காருந்துக்கொண்டு இதை எல்லாம் செய்யுங்கள்.

நீங்கள் இல்லற வாழ்க்கையில் இருந்துக்கொண்டு நான் ஆன்மீக வாழ்வு வாழ வேண்டும் என்றால் நீ்ங்கள் இந்த மாதிரி சக்திகளை எடுத்துக்கொள்வது சிறந்த ஒன்றாக இருக்கும். இதன் மூலம் உங்களின் ஆன்மீக வாழ்க்கைக்கு தேவையானவற்றை அனைத்தும் செய்யலாம்.இந்த சக்தியை எடுத்தபிறகும் இதை வைத்து ஆன்மீகத்தில் நீங்கள் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடையலாம். 

நீங்கள் மாந்தீரிகம் செய்தாலும் இந்த மாதிரி ஏதாவது சக்தியை எடுத்தபிறகு தான் நீங்கள் செய்யமுடியும். மாந்தீரிக பாதிப்பை நிவர்த்தி செய்வதும் இதை வைத்து தான் செய்யமுடியும்.

முடிந்தளவு இதனை செய்வதற்க்கு காலம் தாழ்த்தாமல் இறங்கிவிடுவது நல்லது. உங்களுக்கு இதில் ஈடுபாடு இருக்கும் ஆனால் உங்களின் வேலை காரணமாக இதனை செய்வதற்க்கு உங்களுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம். முடிந்தளவு ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி செய்தாலே உங்களுக்கு இந்த பலன் 24 மணி நேரமும் இருக்கும்.

நீங்கள் அனைவரும் படிப்பதில் இன்பம் காண்கிறீர்கள். இதுவே போதும் என்று நினைக்கிறீர்கள் என்ன செய்வது உங்கள் தலையெழுத்து அதுவாக இருந்தால் என்ன செய்வது படித்துக்கொள்ளலாம். நான் எழுதுவது முதல் வகுப்பு பாடம் இதனை வைத்து ஒன்றும் செய்ய முடியாது.

அதனை உணர்வுடன் செய்கின்ற போது அதற்கு உண்டான பலனை அனுபவிக்கலாம். நீங்கள் நினைப்பது நமக்கு வேலை இருக்கின்றது நம்ம வேலையை பார்த்தாலே போதும் என்று நினைப்பவர்கள் தாராளமாக உங்கள் வேலை பார்க்கலாம்.

இந்த மாதிரி தெய்வங்களை எடுத்த பிறகு உங்களின் வாழ்க்கையை மாற்றும் திறன் அதற்கு உண்டு அதை செய்பவர்களுக்கு தான் தெரியும். இதனை எடுத்தபிறகு தெய்வ உலகத்திற்க்கு நீங்கள் செல்லமுடியும்.

சோதிடத்தை படிப்பவர்கள் நீங்கள் உங்களுக்கு சோதிடம் மூலம் வரும் பிரச்சினையை தெரியும். அந்த பிரச்சினையை தீர்ப்பதற்க்கு வழி தெரியாது அந்த நேரத்தில் இது மிகவும் உதவும்.

யோகா தியானத்தைப்பற்றி உங்களுக்கு சொல்லி தருவதற்க்கு எனக்கு ஒன்றும் பிரச்சினை கிடையாது ஆனால் ஒரு நல்லதை கற்று கொடுத்துவிட்டால் உங்களால் எந்த சூழ்நிலையிலும் உங்களால் சமாளித்து முன்னேற்றம் காணமுடியும். நீங்கள் அனைவரும் வயது ஆகி முதுமை அடைந்தாலும் அந்த நேரத்தில் உங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இந்த தெய்வம் தான் இருக்கும். இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் உங்களின் பிள்ளைகள் உங்களை காப்பாற்றும் என்று எந்த உத்திரவாதமும் இல்லை அதனால் நான் சொல்லுவதை செய்தால் உங்களுக்கு நல்லது.

இதை 108 நாட்கள் செய்தால் உங்களுக்கு தியானம் அதுவாகவே கைகூடும். அப்பொழுது உங்களுக்கு அருமையான அனுபவம் ஏற்படுவதை நீங்கள் உணரலாம்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: