Followers

Friday, November 16, 2012

திருமணமும் புதனும்



வணக்கம் நண்பர்களே திருமணத்தில் புதனின் பங்களிப்பு என்ன என்று இப்பதிவில் பார்க்க போகிறோம்.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற பழமொழி இருக்கிறது. ஒரு நாளில் புதன் காலை நேரத்தில் பலம் பெற்று விளங்குகிறார். காலை 6 மணி முதல் 10 மணிவரை புதனுக்கு அதிக பலன் உண்டு. 

புதன்கிழமை 6 மணி முதல் 7 மணி வரை வருகின்ற புதன் ஒரையும் வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் 8 மணி வரை வருகின்ற புதன் ஓரையும் நல்ல விசேஷ தன்மை உடையவை எந்தவொரு சுப காரியங்களுக்கும் புதன் அதிக பலம் பெற்று இருக்கின்ற காலை 6 மணியில் இருந்து 10 மணிக்குள் செய்து முடித்தால் நல்லது.

திருமணத்தில் பெண்களுக்கு புதன் முக்கிய பங்கு வகிக்கிறார். பெண்களின் விநது சோணிதம் எனப்படும். புதன் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் நன்றாக அமைந்தால் அந்த பெண்ணிற்க்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். புதன் கெட்டால் கூட பெண்களுக்கு திருமண வாய்ப்பு இல்லாமல் போகும். 

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் புதன் 1,2, 7, 8 ,11 ஆம் இடங்களில் இருந்தால் அந்தப் பெண் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் அதிக அக்கறை காட்டுவாள். இவ்வாறு இருந்தால் அந்த பெண்ணிற்க்கு பொறுமை அதிகமாக இருக்கும். இல்லறத்தில் நல்ல ஈடுபாடு இருக்கும். கணவனின் பேச்சை கேட்டு நடப்பாள். 

ஒருவருக்கு லக்கனத்தில் புதன் இருந்தால் ஆயிரம் குறைகளை நீக்கும் என்று சோதிட நூலில் இருக்கிறது. எப்படிப்பட்ட தோஷத்தையும் நீக்கும் என்பார்கள்.

புதன் ஏழாவது வீட்டில் சனியோடு இருந்து இரண்டு கிரகங்களும் கெட்டால் அந்த ஜாதகர் அலியாக மாறுவதற்க்கும் வாய்ப்பு இருக்கிறது. உங்களுக்கு துணையாக வருபவர் இந்த மாதிரி கிரக நிலைகளில் இருந்தால் அவரை விலக்குவது நல்லது.

கணவன் மனைவிக்குள் தூக்கத்தில் இருவருக்கும் சுகமான கனவு வர வேண்டும் என்றால் அவர்களுக்கு புதன் நல்ல முறையில் இருந்தால் வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.



No comments: