Followers

Sunday, November 11, 2012

ஆன்மீக அனுபவங்கள் 20



வணக்கம் நண்பர்களே ஆன்மீக அனுபவங்கள் தொடரில் இப்பதிவில் நமது உடலில் நடைபெறும் மூச்சைப்பற்றி பார்க்கலாம்.

நமது உடலை நோக்கும் போது இந்த மூச்சு எப்படி உள்ளே சென்று வெளியில் வருகிறது என்று ஒரு நாள் யோசித்தால் போதும் நீங்கள் அரைவாசி ஞானியாக மாறிவிடுவீர்கள் அதில் அவ்வளவு அற்புதம் நிறைந்துள்ளது.

இதை எல்லாம் நாம் கவனித்து வந்தால் தான் நாம் ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற்றம் காணலாம் இதை எல்லாம் கவனிக்காமல் ஆன்மீகத்தில் நான் செல்லுகிறேன் என்று சொல்லிக்கொண்டு செல்லக்கூடாது.

இந்த மூச்சைப்பற்றி அதிகமாக சிந்திந்தவர்கள் இந்த உலகிலேயே சித்தர்கள் தான்  அவர்கள் ஆராய்ந்து பல விசயங்களை இதைப்பற்றி சொல்லியுள்ளார்கள். 

உடம்புக்குள் 72000 நாடி நரம்புகள் இருப்பதாக சொல்லியுள்ளார்கள். இந்த நாடிகளில் முக்கியமாக சில நாடிகளை சொல்லியுள்ளார்கள். இந்த நாடி நரம்புகளில் 24 நாடி நரம்புகள் மிகமுக்கியமானது என்றும் சொல்லியுள்ளார்கள். இதையும் 10 நாடி நரம்புகள் தனியாகவும் அடுத்த 10 நாடி நரம்புகள் தனியாகவும் பிரித்து வைத்துள்ளார்கள். மீதம் 4 நாடி நரம்புகளை இரண்டாகவும் பிரித்து வைத்திருக்கிறார்கள் முதல் பத்து நாடிகள் மேல் நோக்கியும் மீதி பத்து நாடிகள் கீழ் நோக்கியும் இருக்கும் இதை சுற்றி பாம்பு போல் நான்கு நாடிகள் சுற்றிக்கொண்டு இருக்கிறது என்றும் சொல்லியுள்ளார்கள்.

பத்து நாடியில் 3 நாடிகள் தான் முக்கியமானது என்றும் சொல்லியுள்ளார்கள் அந்த 3 நாடிகள் தான் நமது உயிர் அடங்கி இருக்கிறது என்றும் சொல்லியுள்ளார்கள் இதனைப்பற்றி அதிகம் சொல்ல வேண்டாம் ஏன் என்றால் ஏற்கனவே நமது தளத்திற்க்கு வருபவர்கள் எண்ணிக்கை குறைவு இதில் இது எல்லாம் எழுதினால் ஒருவரும் வர மாட்டார்கள் நான் மட்டும் எழுதிக்கொண்டு இருக்க வேண்டியது தான் இருந்தாலும் பரவாயில்லை யாருக்காவது இது பயன்படும் அல்லது உண்மையான ஒருவன் இதை பார்த்து என்னை தேடிவருவான். 

இப்பொழுது மூச்சைப்பற்றி பார்க்கலாம்.சூரிய நாடி, சந்திர நாடி என்று சுவாசத்தில் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியும் அதைப்பற்றி  எனக்கு தெரிந்ததை சொல்லுகிறேன்.

இந்த மூச்சு மூக்கின் இருதுவாரங்களிலும் நடைபெறுவதை சூரியகலை சந்திரகலை என்று பிரிப்பார்கள். மூச்சு சூரியகலையிலும் சந்திரகலையிலும் மாறி மாறி மூச்சு உடலுக்கு செல்கிறது இது வழக்கமாக ஏழரை நாளிகைக்கு ஒரு முறை மாறும்.

இந்த மூச்சு மட்டும் இப்படி சரியாக மாறி நடந்துகொண்டு இருந்தால் உங்களுக்கு எந்த நோயும் இல்லை என்று நீங்கள் நம்பலாம். இதை எல்லாம் கவனிக்க நமக்கு நேரம் இருக்குமா என்று நீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது.கவனித்தால் ஆன்மீகத்தில் வெற்றி அடையலாம்.

இந்த மூச்சை நமக்கு தகுந்தவாறு மாற்றி்க்கொள்ளலாம். என்ன கதை விடுகிறாய் என்று கேட்கலாம் ஆனால் சித்தர்கள் இந்த கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் அவர்கள் விருப்பம் போல் மாற்றிக்கொள்ளுவது எப்படி என்று தெரிந்தவர்கள்.

பொதுவாக சூரியகலையில் நடைபெறும் போது அனைத்தும் வெற்றியை தரும். நீங்கள் மந்திரங்களை உரு ஏற்றும் போது சூரியகலையில் மூச்சு வந்தால் நீங்கள் உரு ஏற்றும் மந்திரம் எளிதில் உரு ஏறும். நீங்கள் சொல்லும் மந்திரம் வெற்றி அடையும்.

சூரியகலையில் மூச்சு நடைபெறும் போது மந்திரங்களை சொல்ல வேண்டும். இதையே நீங்கள் நடைமுறை வாழ்க்கையிலும் இதனை செய்து நீங்கள் வெற்றி அடையமுடியும். 

நீங்கள் ஒரு நபரை சந்தி்த்து ஏதோ ஒரு வேலையை உங்களுக்கு அவர் மூலம் நடைபெற வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்த நபரை சந்திக்க செல்லும் போது சந்திர நாடியில் மூச்சு வருமாறு வைத்துக்கொண்டு செல்லுங்கள் அவரை பார்க்கும் போது சூரிய நாடியில் மூச்சை மாற்றிவிட வேண்டும் அவ்வாறு செய்யும் போது அந்த நபர் உங்களுக்கு சாதகமாக செய்வார். இதற்கு நீங்கள் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும் அப்பொழுது மட்டுமே அது சாத்தியப்படும்.

கடும் குளிர் பிரதேசங்களில் நீங்கள் செல்லுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அப்பொழுது நீங்கள் மூச்சை சூரிய நாடியில் மாற்றிக்கொண்டால் உங்கள் உடல் குளிரை தாங்கும் வண்ணம் மாற்றிக்கொள்ளும் இமயமலையில் உள்ள ரிஜிகள் எல்லாம் இதை செய்து கொண்டு தான் தியானத்தில் அமருவார்கள் அப்பொழுது மட்டுமே அங்கு அவர்களால் தியானம் செய்யமுடியும். இதைப்போல் நீங்கள் பாலைவனத்தில் இருந்தால் சந்திரகலையில் மாற்றிக்கொண்டால் உங்கள் உடல் வெப்பத்தை தாங்கும் வண்ணம் மாற்றிக்கொள்ளும்.

பொதுவாக நீங்கள் மந்திரங்களை உரு ஏற்றும் போது நீங்கள் சூரியகலையில் மாற்றிக்கொண்டு செய்யுங்கள் அப்பொழுது மட்டுமே அது உங்களுக்கு அந்த மந்திரம் பயன்படும் அப்படி இல்லை என்றால் அந்த மந்திரம் உங்களுக்கு எதிராக வேலை செய்ய ஆரம்பித்துவிடும். மாந்தீரிகம் செய்யும் போது மட்டுமே சந்திரகலையை பயன்படுத்துவார்கள் அப்பொழுது மட்டுமே மாந்தீரிகம் வெற்றி அடையும்.

நம் ஆட்கள் மந்திரங்களை சொல்லும் போது சந்திரகலையில் சொல்லிக்கொண்டு இருப்பார்கள் அந்த மந்திரம் அவருக்கு நன்மை செய்வதற்க்கு பதிலாக தீமை செய்யும் இதனை முதலில் நீங்கள் புரிந்து கொண்டாலே பல தளங்களில் நடத்திக்கொண்டு இருக்கும் கூத்து என்ன என்று உங்களுக்கு தெரியவரும். உங்களுக்கு ஆன்மீகத்தில் செல்லுவதற்க்கு அடிப்படை அனா ஆவான தெரி்ந்து இருக்க வேண்டும் அப்பொழுது மட்டுமே உங்களுக்கு எதனை செய்தால் வெற்றி அடையலாம் என்று தெரியும். 

அனா ஆவான கற்று கொடு்ப்பவன் தான் உங்களுக்கு மிக உயர்ந்த குரு. நீங்கள் இன்றைக்கு மிக உயர்ந்த படிப்பை படித்துவிட்டு பெரிய வேலையில் இருந்தாலும் உங்களுக்கு அனா ஆவான கற்று கொடுத்த முதல் வகுப்பு ஆசிரியருக்கு தான் நீங்கள் நன்றி கடன் படவேண்டும் ஏன் என்றால் உங்களுக்கு முதலில் கற்றுகொடுத்த எழுத்தை வைத்து தான் இன்றைக்கு இவ்வளவு படிப்பு படிக்கமுடிந்தது அதை அவர் கற்றுக்கொடுக்கவில்லை என்றால் நீங்கள் இந்தளவுக்கு உயரமுடியுமா? . 

முதல் வகுப்பு ஆசிரியர் அனா ஆவான கற்றுக்கொடுக்கும் போது கொஞ்ச எழுத்தை கற்று கொடுத்து இருப்பார் அதையே நீங்கள் மாஸ்டர் டிகிரியில் கூடுதலாக நிறைய எழுத்தை கற்று இருப்பீர்கள் ஆனால் எழுத்து என்பது ஒன்று தான் அந்த எழுத்தை தந்தவன் முதல் வகுப்பு ஆசிரியர் அதை வைத்து இன்றைக்கு கூடுதல் எழுத்தை படித்து இருக்கிறோம் இதை மட்டும் நீங்கள் மனதில் வைத்தால் உங்களால் உலகத்தில் பல ஞானிகளை நீங்கள் உருவாக்குமுடியும். எந்த கர்வமும் தலைக்கு ஏறாது.

உங்களுக்கு மூச்சை எப்படி மாற்றுவது என்பதை உங்கள் குரு உங்களுக்கு சொல்லிதருவார்.அதனை செய்து வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.


No comments: