Followers

Friday, November 9, 2012

மகிழ்ச்சியை தரகூடிய அறிவிப்பு



வணக்கம் நண்பர்களே ஆன்மீக அனுபவத்தை படித்துவிட்டு எனக்கு கற்றுத்தாருங்கள் என்று பல பேர் என்னை நேரிலும், போனிலும், இ மெயிலும் தொடர்புக்கொண்டு கேட்டீர்கள் ஆனால் நான் ஒரு சில காரணங்களால் உங்களை தவிர்த்தேன். 

இப்பொழுது ஒருவருக்கு கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது அதனால் உங்களுக்கு அந்த பாக்கியம் இருந்தால் அது கிடைக்கும். இதை பற்றி முழுமையான அறிவிப்பை கூடிய விரைவில் வெளியிடுவேன் அப்பொழுது என்னை தொடர்பு கொள்ளலாம்.

இந்த காலத்தில் குரு கிடைப்பதற்க்கு எவ்வளவு கடினம் என்று உங்களுக்கு நன்றாக தெரிந்து இருக்கும். நீங்கள் தான் இதனை என்னிடம் சொன்னீர்கள் அதை நானும் ஒத்துக்கொள்கிறேன். 

முதலில் நீங்கள் ஒன்றை நன்றாக கவனிக்க வேண்டும் ஆன்மீகத்தில் இருப்பவர்கள் சோதிடம் பார்ப்பவர்களுக்கு யாரிடமும் பற்று வைக்க மாட்டார்கள் இதை நீங்கள் பல பதிவுகளிலும் இந்த தகவல்களை உங்களுக்கு தந்து இருப்பார்கள். ஏன் என்றால் மனிதர்களின் குணங்களை படித்தவர்கள் இவர்கள் மேல் பற்று வைத்தால் மனிதன் என்ன செய்வான் என்று நன்றாக அவர்களுக்கு தெரியும்.

என்னை பொருத்தவரை அடுத்தவர்களிடம் பற்று வைப்பேன் ஆனால் அவர்கள் பிரிந்து போனாலோ அல்லது ஏதாவது ஒரு காரணத்திற்க்காக என்னை விட்டு சென்றாலோ அதனைப்பற்றி நான் கவலைபடமாட்டேன். அவர்களின் விதி அது என்று விட்டுவிடுவேன்.

குரு நிறைய பேர் இந்த உலகத்தில் கிடைக்கிறார்கள் அவர்களிடம் கற்பதற்க்கு சென்றால் பல சோதனைகளில் உங்களை உட்படுத்திதான் உங்களை சேர்ப்பார்கள். அந்த சோதனைகளை கடப்பது ரொம்ப கடினமான ஒன்று. இந்த அவசர உலகத்தில் நமது பிரச்சினைகளை கவனிப்பதற்க்கே நேரம் இல்லை இதில் குரு வைக்கும் சோதனைகளை எப்படி தாங்குவது என்று நினைத்துக்கொண்டு நாம் குருவை தேடவில்லை என்பது தான் உண்மை.

பிரச்சினைகளை கடப்பதற்க்கான வழிகளை தான் குரு உங்களுக்கு கொடுப்பார். அதனை கொண்டு நீங்கள் கடந்துவிடலாம். என்னை பொருத்தவரை நான் குருவாக உங்களுக்கு சொல்லி தரவில்லை ஒரு நண்பனாக உங்களுக்கு சொல்லிதருவேன். நான் சோதனை செய்யமாட்டேன். ஆனால் இதனை கற்பதற்க்கு உங்களுக்கு பூர்வபுண்ணியம் தடைசெய்யும்.

என்னிடம் கற்பதற்க்கு முன்னால் 45 நாட்கள் சென்று வாருங்கள் என்று சொல்லுவேன் .அந்த 45 நாட்கள் நீங்கள் உங்களின் வாழ்வில் கடுமையான பிரச்சினையை சந்திக்க வேண்டியிருக்கும். 45 நாட்கள் முடிந்து உங்களால் என்னை தொடர்பு கொள்ளமுடியாமல் போனால் உங்களை அப்படியே விட்டுவிடுவேன். 

45 நாட்கள் பிறகு என்னை தொடர்பு கொண்டு இப்பொழுது நான் ஒரு வேலை இருக்கிறது அதனை முடித்துவிட்டு வருவேன் என்று சொன்னால் நான் ஒத்துக்கொண்டு உங்களின் மனதில் ஒரு நிம்மதி உருவாக்க அதற்கான வழியை செய்துவிடுவேன். அதன் பிறகும் நீங்கள் வரவில்லை என்றால் உங்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தவரை தேர்ந்தெடுத்துவிடுவேன். இது ஒன்று தான் நான் உங்களுக்கு செய்யும் சிறிய ஒரு சோதனை. இதை கற்பதற்க்கு என்று ஒரு சில கட்டளை உண்டு அதில் நீங்கள் தேறினால் உங்களுக்கு அது கிடைக்கும் அப்படி இல்லை என்றால் நீங்கள் வேறு ஒருவரை பார்த்துக்கொள்ளுவது நல்லது.

முடிந்தவரை வாழ்வில் அடிப்பட்டு வருபவர்களுக்கு தான் இது கிடைக்கும் அப்பொழுது மட்டுமே இதன் அருமை புரியும். ஒரு குரு ஒரு நண்பனாக உங்களுக்கு கிடைப்பதற்க்கு நீங்கள்  பாக்கியம் செய்து இருக்க வேண்டும். கூடிய விரைவில் அறிவிப்பை வெளியிடுகிறேன். அதுவரை நீங்கள் ஆன்மீக அனுபவ தொடரை நன்றாக மீண்டும் படியுங்கள் அதில் அனைத்தும் உள்ளன.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Sundararajan Srinivasan said...

"45 நாட்கள் பிறகு என்னை தொடர்பு கொண்டு இப்பொழுது நான் ஒரு வேலை இருக்கிறது அதனை முடித்துவிட்டு வருவேன் என்று சொன்னால் நான் ஒத்துக்கொண்டு உங்களின் மனதில் ஒரு நிம்மதி உருவாக்க அதற்கான வழியை செய்துவிடுவேன். அதன் பிறகும் நீங்கள் வரவில்லை என்றால் உங்களை அப்படியே விட்டுவிட்டு அடுத்தவரை தேர்ந்தெடுத்துவிடுவேன்"


தாங்கள் கூறிய கருது புரியவில்லை
விளக்கவும்.

நன்றி