Followers

Saturday, November 10, 2012

ஆன்மீக அனுபவங்கள் 19



வணக்கம் நண்பர்களே நேற்று அறிவிப்பை பார்த்துவிட்டு என்னிடம் தொடர்பு கொண்டு பேசியவர்கள் நீங்கள் ஏன் இப்படி 45 நாட்கள் வரை கெடு கொடுத்து அதன் பிறகு சரியில்லை என்றால் எங்களை விட்டுவிடுகிறீர்கள் அதற்கு நீங்கள் இதனை செய்யாமலே இருந்து இருக்கலாமே பாவம் அவர்களும் கஷ்டபடுவார்களே அவர்களுக்கு ஒரு வழி செய்யலாமே என்று கேட்டார்கள்.

நேற்றைய பதிவை படித்து விட்டு நான் ஏமாற்றுகிறேன் என்று நினைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உண்மையில் நான் தருகிறேன் என்று சொன்னால் கண்டிப்பாக அதை கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். அவர்களுக்காக நான் கொடுக்க நினைத்தது அப்படியே இருக்கும். அவர்களின் தேடுதல் வேறு ஒன்றாக இருக்கும் அதை தேடி அவர்களுக்கு அதில் மனநிறைவு கிடைத்தால் நல்லது அவர்களுக்கு எதிலும் மனநிறைவு  கிடைக்கவில்லை பிரச்சினை தான் இருக்கிறது என்று திரும்பவும் என்னை தொடர்பு கொண்டால் அவர்களிடம் கொடுத்துவிடுவேன்.

கண்டிப்பாக ஆன்மீக விசயங்களில் ஏமாற்றுவது எனக்கு பிடிக்காத ஒன்று அதனால் நீங்கள் என்னை பார்த்து பயப்பட வேண்டியதில்லை. நான் ஏற்கனவே உங்களுக்கு சொல்லியுள்ளேன் எது உண்மையான விசயமே அதை மட்டுமே உங்களுக்கு சொல்லுவேன். நான் படித்த மந்திரங்கள் யோக தியானங்களை வைத்து ஏதாவது ஒரு மந்திரம் அல்லது யோகவை வைத்து இதை செய்யுங்கள் அந்த சித்தர் தெரிவார் அந்த தேவதை தெரியும் என்று சொல்லி உங்களை ஏமாற்ற எவ்வளவு நேரம் ஆகும் ஆனால் அதை செய்து அனைவரும் போல் என்னை மாற்றிக்கொள்ள நான் விரும்பவில்லை. எது உண்மை இருக்குமோ அதை சொல்லுவேன் அதை தான் செய்வேன். 

இப்பொழுது அனைவரும் நல்ல புரிதலோடு இருக்கிறார்கள் அனைவரும் நான் என்ன சொல்லுகிறேன் என்று கூர்ந்து கவனிக்கிறார்கள் ஒரு போதும் தவறானவற்றை உங்களுக்கு   சொல்லிக்கொடுப்பது என்னால் முடியாத காரியம்.

வரும் வளர்பிறையில் நிறைய நண்பர்கள் மந்திர அனுபவங்களை பெறுவதற்க்கு தயாராக இருக்கிறார்கள் அவர்கள் அவர்களாகவே இந்த முயற்சியில் இறங்க போகிறார்கள்.அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்து தர தயாராக இருக்கிறேன் அவர்கள் மீண்டும் என்னை தொடர்புகொள்ளலாம்.

ஒரு குரு இருந்து உங்களுக்கு என்ன சொல்லிதருவாரோ அந்த மாதிரி நான் சொல்லி தருவேன் ஆனால் குருவாக இல்லை நண்பனாக சொல்லி தருகிறேன். வயதானவர்கள் எல்லாம் இதை செய்ய நினைக்கிறார்கள் அவர்கள் என்னிடம் பேச தயங்கலாம் என்னடா ஒரு சிறியவனிடம் போய் கேட்பதா என்று நினைக்கலாம் நீங்கள் தயங்காமல் எது வேண்டுமானாலும் கேளுங்கள் அதனை செய்து தருகிறேன் நான் சொல்லி தரும் விசயத்தை பார்த்தே நான் எப்படிபட்டவன் என்று உங்களுக்கு தெரியும்.

பல நண்பர்கள் என்னை தொடர்புகொண்டு கேட்கும் போது இதில் ஈடுபடுவதற்க்கு பிரச்சினை வருகிறது என்ன செய்யலாம் என்று கேட்கிறார்கள் உங்கள் ஜாதகத்தை எடுத்து பாருங்கள் அதில் அனைத்தும் இருக்கும் அதில் இருந்தே அனைத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். நீங்கள் ஏற்கனவே எத்தனை பிறவி எடுத்தீர்கள் இந்த பிறிவியில் என்ன செய்ய வேண்டும் அடுத்த பிறவி இருக்கிறதா என்று அனைத்திற்க்கும் ஒரே ஒரு அட்சயபாத்திரம் உங்கள் ஜாதகம் தான் அதனை பார்த்து உங்கள் ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் காணலாம்.

ஆன்மீக அனுபவங்கள் தொடரில் நிறைய எழுதவேண்டியுள்ளது அனைத்தையும் சொல்ல நினைக்கிறேன் கூடிய விரைவில் அனைத்தும் வரும். அடுத்து சோதிடத்தில் எந்த தசாவைப்பற்றி பார்க்கலாம் என்று சொல்லுங்கள். நன்றி நண்பர்களே


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: