Followers

Saturday, May 25, 2013

வாஸ்து: பகுதி 3



வணக்கம் நண்பர்களே !
                     நேற்று திருவண்ணாமலைக்கு சென்றுக்கொண்டு இருக்கும்பொழுது நமது பாண்டிச்சேரி நண்பர் போன் செய்து வீட்டில் பணப்பெட்டியை எங்கு வைப்பது என்று கேட்டார். நாமும் வாஸ்து பகுதியை ஆரம்பித்து அது பாதிலேயே நிற்கிறது அதனை தொடங்கு என்று இவரின் வழியாக உணர்த்துகிறது என்று எண்ணி வாஸ்துவை தொடர்கிறேன்.

நாம் கஷ்டபட்டு பணத்தை சம்பாதிக்கிறோம் அப்படி பணத்தை சம்பாதித்தாலும் அந்த பணம் வங்கியில் தான் இப்பொழுது எல்லாம் பணத்தை வைத்திருக்கிறோம். ஒரு அவசர தேவைக்கு என்று வீட்டிலேயே பணத்தை வைத்திருப்போம் அல்லவா அந்த பணப்பெட்டியை எங்கு வைக்கலாம் என்பதை பார்க்கலாம்.

ஒரு வீட்டில் தென்மேற்கு பகுதி மேற்கு பகுதி வடமேற்கு பகுதி போன்றவற்றில் பணப்பெட்டியை வைக்கலாம். அந்த பணப்பெட்டி பார்க்கும் திசை கிழக்கு வடக்கு நோக்கி இருந்தால் நல்லது. 

பல பேர் பீரோவில் தான் பணத்தை வைப்பார்கள். மேலே சொன்ன இடத்திலேயே பீரோவை வைக்கலாம்.அக்னி மூலையிலும் ஈசானிய மூலையிலும் எக்காரணம் கொண்டும் அதிக பளூ உள்ள பொருட்களை வைக்ககூடாது. அந்த இடத்தில் நீங்கள் கொண்டுபோய் பீரோவை வைத்தால் உங்களுக்கு பணம் என்பதே வராது.

ஒரு ரூம் மட்டுமே இருக்கும் அறையை கொண்டது உங்களின் வீடாக இருந்தால் மேலை சொன்ன மாதிரியே உங்களின் பணப்பெட்டியை வைத்துக்கொள்ளுங்கள். உங்களை தேடி பணம் வரும். பணம் உங்களிடமே தங்கியிருக்கும்.

இதனை நீங்கள் பயன்படுத்தி உங்களின் பொருளாதாரத்தை உயர்த்திக்கொண்டு நல்ல வாழ்க்கையை வாழுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: