Followers

Friday, May 10, 2013

ஆன்மீக அனுபவங்கள் 89


வணக்கம் நண்பர்களே!

                     காயத்ரி மந்திரம் செய்பவர்கள் அனைவரும் என்னிடம் கேட்கும் கேள்வி மந்திரங்களை எங்களுக்கு தாருங்கள் என்று கேட்கிறார்கள். ஒவ்வொரு தெய்வத்திற்க்கும் ஒரு மந்திரம் இருக்கிறது அனைத்தையும் கொடுக்கமுடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. உங்களுக்கு பிடித்த தெய்வங்களை நீங்கள் எடுப்பதால் மந்திரங்கள் கொடுக்கமுடியவில்லை.

ஒரு தெய்வத்தின் மந்திரத்தை மட்டும் நான் கொடுத்தேன் என்றால் உங்களுக்கு அந்த தெய்வம் பிடிக்காமல் இருக்கும் வேறுவழியில்லை என்று அதனை செய்யமுயல்வீர்கள் உங்களுக்கு அது சித்தி ஆகாது அதனால் மந்திரங்களை கொடுக்கவில்லை. 

உங்களுக்கு பிடித்த தெய்வங்களை நீங்கள் எடுக்கும்பொழுது அவர்களுக்கு எளிதில் சித்திகிடைக்கும். உங்களுக்கு ஒரு தெய்வம் பிடிக்கிறது என்றால் அதற்கு காரணம் இருக்கிறது. அவர்களின் ஜாதகத்தில் அப்படி இருப்பதால் அந்த தெய்வம் பிடிக்கும். உங்களுக்கு பிடிக்கும் தெய்வத்தை எனது வழிமுறையில் நீங்கள் மந்திர உரு ஏற்றும்பொழுது அந்த தெய்வம் உங்களிடம் எளிதில் வந்துவிடுகிறது. உங்களுக்கு அந்த தெய்வம் அனைத்தையும் செய்து தருகிறது. 

இதுவரை நீங்கள் ஒவ்வொரு கோவிலாக சென்று வழிபட்டு வருவீர்கள் அதனால் குறைந்தளவு அருளை மட்டும் பெற்று இருப்பீர்கள். மந்திர பயிற்சி வழியாக ஒரு தெய்வம் உங்களை தேடி வந்துவிடும் அப்பொழுது உங்களுக்கு அந்த தெய்வம் அனைத்தையும் செய்து தரும். 

எந்த ஒரு செயலும் ஒரு வழிகாட்டுதலுடன் செய்யும்பொழுது மட்டுமே அந்த செயல் வெற்றியை நோக்கி செல்லும். அந்த வழிகாட்டுதலை மட்டும் ஜாதக கதம்பம் செய்கிறது. நீ்ங்கள் இதனை பின்பற்றி செயல்படுத்தி வாருங்கள்.

ஒரு சிலர் சொல்லுவார்கள் நான் இல்லறவாழ்க்கையில் இருக்கிறேன் நான் இதனை செய்தால் ஏதும் பிரச்சினை ஏற்படுமோ என்று பயமாக இருக்கிறது என்று சொல்லுவார்கள். அப்படி ஒன்றும் பிரச்சினை இல்லை. பிரச்சினையை சமாளிக்கும் ஆற்றலை பெறுவதற்க்கு தான் இதனை செய்கிறோம் அதனால் பயம் கொள்ளாமல் இதனை ஆரம்பிக்கலாம்.வாழ்க்கையில் உயர்வான படிகளை அடைய இது ஒரு நல்ல வழி. 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: