Followers

Wednesday, May 1, 2013

மீனம்: ஐந்தில் கேது



வணக்கம் நண்பர்களே!

                     மீன ராசிக்கு ஐந்தில் கேது நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

தாயாருக்கு பிரச்சினையை கொடுத்திருப்பார்.

அடையாளம்?

கடக ராசி புனர்பூச 4 ம் பாதத்தில் கேது பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் பொன்நிறம்போல் தோற்றம் அளிக்கும். இவர் மலையாள மொழி தெரிந்திருக்கும். இவரின் வீடு வடகிழக்கு பக்கமாக இருந்திருக்கும்.

கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் கருப்பு நிறமாக இருப்பார். இவர் அந்நியமொழி பேசியிருப்பார். இவரின் வீடு மேற்கு பக்கமாக இருக்கும்.

கடக ராசி ஆயில்ய நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் மாநிறமாக இருந்திருப்பார். தாய்மொழியை மீது அதிக ஈடுபாடு இருக்கும். இவரின் வீடு வடக்கு பக்கமாக இருந்திருக்கும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

கடக ராசி புனர்பூச 4 ம் பாதத்தில் கேது பகவான் அமர்ந்தால்

நீரில் தள்ளிவிட்டு மூச்சு திணறி செத்திருப்பார்.

கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

கால்கள் மற்றும் தொடைகள் தாக்கி கொன்றுருக்ககூடும்.

கடக ராசி ஆயில்ய நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

கழுத்தில் அடிப்பட்டு செத்திருப்பார்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

கடக ராசி புனர்பூச 4 ம் பாதத்தில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடகிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும்.

கடக ராசி பூசம் நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு மேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும்.

கடக ராசி ஆயில்ய நட்சத்திரத்தில் கேது பகவான் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும்.

பரிகாரம்

திங்கள் கிழமை சிவனை வணங்கிவாருங்கள். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: