Followers

Thursday, May 16, 2013

ஆன்மீக அனுபவங்கள் 91



வணக்கம் நண்பர்களே!
                    நேற்று ஒரு நண்பர் என்னிடம் பேசினார். பேசிக்கொண்டு இருக்கும்பொழுது ஜாதகத்தைப்பற்றி கேட்டுருந்தார். அப்பொழுது அவரிடம் சொன்னேன் இந்த மாதிரி கிரக அமைப்பு என்பது பெரிய விஷயம் இல்லை அதனை எல்லாம் மாற்றிக்கொள்ளலாம் என்றேன். எப்படி சார் மாற்றமுடியும் என்றார். கர்மாவை எப்படி மாற்றுவது அதுவும் கிரகத்தின் பிடியில் இருந்து எப்படி தப்பிப்பது என்றார். 

நாம் எப்படிபட்ட கர்மாவை சுமந்து வந்தாலும் அதனை போக்கும் வழியை கண்டுபிடித்து வைத்திருப்பவர்கள் நமது சந்நியாசிகள். அவர்களிடம் நீங்கள் தொடர்பு வைத்துக்கொள்ளும்பொழுது உங்களை புனிதராக மாற்றிக்கொள்ளமுடியும் என்றேன். ஜாதகம் சொல்லுவது உண்மை தான் ஆனால் நாம் என்ன தான் சரியாக கணக்கை போட்டாலும் ஒரு சில விசயங்கள் ஜாதகத்தில் இல்லாதது போல் நடந்துவிடும். அப்பொழுது நாம் தலையை பிய்த்துக்கொள்வோம்.

ஒரு நாள் குருவோடு பேசிக்கொண்டு இருக்கும்பொழுது கேட்டேன் ஒருவன் ஏழையாக இருக்கிறான் அவனை கோடிஸ்வரனாக மாற்றமுடியுமா என்று கேட்டேன். அதற்கு குரு சொன்னார் அவனின் பூர்வபுண்ணியத்தில் அவன் செய்த பூர்வபுண்ணியம் சேர்ந்து இருக்கும் அது இந்த பிறவியில் வராமல் போகலாம். அந்த பூர்வபுண்ணியத்தை இந்த பிறவியில் வரும்படி எடுத்து அவனை கோடிஸ்வரனாக மாற்றமுடியும் என்று சொன்னார்.

பல அற்புத விசயங்கள் ஜாதகத்தில் மறைந்து இருக்கிறது அதனை வெளிக்கொண்டுவர அதிக சக்திபடைத்த ஆட்கள் தேவை அந்த ஆட்கள் நினைத்தால் அனைத்தையும் வெளிக்கொண்டுவரமுடியும். சந்நியாசியிடம் உள்ள சக்தி அணுகுண்டைவிட அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். அவர்கள் நினைத்தால் அனைத்தும் முடியும்.

நமது கர்மாவின் வினையை குறைப்பதற்க்கு கூட சந்நியாசிகளின் தொடர்பு வைத்துக்கொள்வது நல்லது அவர்கள் நினைத்தால் அனைத்தையும் சரிசெய்து கொடுக்கமுடியும். நீங்கள் சரியான சந்நியாசிகளை சந்திக்கும்பொழுது உங்களுக்கு இதனைப்பற்றி தெரிய ஆரம்பிக்கும்.

நமது பாவப்பட்ட ஆத்மா அவர்களிடம் சொல்லும்பொழுது நமது கர்மவினை வெகுவாகு குறைகிறது. அவர்களின் ஆத்மாவின் வெளிச்சம் நமது ஆத்மாவில் படும்பொழுது மிகுந்த உற்சாகம் நமது ஆத்மா அடையும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

Sundararajan Srinivasan said...

அருமையான பதிவு.

rajeshsubbu said...

//* Sundararajan Srinivasan said...
அருமையான பதிவு. *//
நன்றி நண்பரே