Followers

Friday, May 31, 2013

அன்னை காளிகாம்பாள்


வணக்கம் நண்பர்களே!
                    நேற்று திருப்போரூர் சென்று வந்ததை பதிவில் சொல்லிருந்தேன். பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு நீங்கள் பதிவில் சொல்லிருந்தால் நாங்களும் வந்து இருப்போம் என்று சொன்னார்கள். கூப்பிட்டால் யாரும் வருவது கிடையாது கூப்பிடாமல் இருந்தால் போன் போட்டு ஏன் சொல்லிவில்லை என்று சொல்வார்கள் நமது நண்பர்கள் பரவாயில்லை. 

நீங்கள் அனைவரும் ஏதோ ஒரு தொழில் செய்துக்கொண்டு இருப்பவர்கள் அல்லது வேலைக்கு செல்பவர்கள் உங்களை நான் தேவையில்லாமல் அனைத்து இடத்திற்க்கு கூப்பிட்டால் உங்களின் வேலை பாதிக்க செய்யும். உங்களின் வேலை தான் உங்களுக்கு முக்கியம் அடுத்தபடியாக ஆன்மீகத்தை வைததுக்கொள்ளலாம். எனக்கு தொழில் ஆன்மீகம் அதனால் கோவில்களுக்கு செல்வது வழக்கம். சரி விசயத்திற்க்கு வருகிறேன்.

சென்னை காளிகாம்பாள் கோவிலுக்கு நான் அடிக்கடி செல்வது வழக்கம். சென்னையின் காவல்தெய்வம் காளிகாம்பாள்.செவ்வாயகிழமை மற்றும் வெள்ளி்ககிழமை தவறாமல் அங்கு சென்று வணங்கிவிட்டு வருவேன். இடையிலும் ஏதாவது செல்லவேண்டும் என்று ஞாபகம் வந்தால் அங்கு சென்று வணங்கிவிட்டு வருவது வழக்கமாக வைத்திருப்பேன். இதனை இன்று முதல் முறையாக உங்களுக்கு சொல்லுகிறேன். ஏன் அங்கு சென்று வணங்குகிறேன் என்றால் நாம் எந்த ஊரில் இருந்தாலும் எது காவல் தெய்வம் என்பதை தெரிந்துக்கொண்டு அந்த தெய்வத்தை வணங்கினால் நமக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் நமது வாழ்க்கை செல்லும். என்னை மாதிரி தொழில் செய்பவர்கள் காவல்தெய்வத்தை வணங்கி தான் தொழில் செய்யமுடியும். 

நான் சென்னையில் இருந்துக்கொண்டு தொழில் செய்வதால் இதனை வழக்கமாக வைத்திருக்கிறேன். நீங்களும் உங்களின் ஊரை விட்டு வெளியூரில் தங்கி வசிக்கலாம். அநத் ஊரின் காவல்தெய்வத்தை வணங்குவது உங்களுக்கு நல்லது. இன்று நாடு இருக்கும் நிலையில் நாம் அடுத்த ஊரில் போய் நாம் தங்கி ஒரு வேலையோ அல்லது தொழிலோ செய்யும்பொழுது நமக்கு எந்த தொந்தரவும் யாரும் கொடுத்துவிடகூடாது என்பதால் இந்த மாதிரியாக நாம் வணங்கவேண்டும்.

சென்னை காளிகாம்பாள் நல்ல சக்தி வாய்ந்த அம்மன். கேட்ட வரத்தை கொடுக்கிறாள். இந்த கோவில் பழமையான கோவில். சத்திரபதி சிவாஜி இந்த கோவிலை 1677 ஆம் ஆண்டு வணங்கியதாக தகவல் உள்ளது. காயத்ரி அம்மனின் சிலை இங்கு இருக்கிறது. பல நல்ல விசயங்கள் அங்கு இருக்கிறது அது எல்லாம் நீங்களே சென்று தெரிந்துக்கொள்ளுங்கள். சென்னையில் நீங்கள் இருந்தால் ஒரு செவ்வாய்கிழமை அல்லது வெள்ளி்கிழமை சென்று வணங்கிவாருங்கள். இன்று மாலை நான் அங்கு செல்வேன்.





நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: