Followers

Thursday, May 23, 2013

லட்சுமி வாசம்



வணக்கம் நண்பர்களே!
                     ஒருவரிடம் லட்சுமி வாசம் செய்யவேண்டும் அப்பொழுது தான் நல்ல செல்லவளத்தோடு அவர் வாழமுடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

இரவில் நீங்கள் தூங்குவதற்க்கு முன்பு நன்றாக முகத்தை தண்ணீரில் அலம்பிட்டு தூங்கவேண்டும். காலை மாலை குளியல் செய்வது நல்லது. தண்ணீர் பஞ்சத்தில் ஒரு நேரம் தான் குளிக்கமுடியுது என்றால் பரவாயி்ல்லை. இரவில் தூங்குவதற்க்கு முன்பு முகத்தை அலம்பிவிட்டு தூங்குவது நல்லது. தீயசக்திகள் நம்மை நெருங்காது. லட்சுமி நம்மோடு இருக்கும். 

முடிந்தவரை இரவில் சீக்கிரமாக தூங்குவது நல்லது அப்பொழுது தான் விடியற்காலையில் நீங்கள் எழுந்திருக்கமுடியும். விடியற்காலையில் பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்தாலே லட்சுமி நிரந்திரமாக உங்களிடம் தங்கிவிடும். இன்றைய நாகரீக உலகத்தில் இரவில் நீண்டநேரம் விழித்துக்கொண்டு இருக்கிறார்கள். அதுவும் வெள்ளிக்கிழமை சனிக்கிழமை இரவில் நீண்ட நேரம் விழித்துக்கொண்டு இருக்கிறார்கள். நீண்ட நேரம் இரவில் விழித்துக்கொண்டு இருப்பது மறுநாள் உங்களால் விடியற்காலையில் எழுவது கடினமாகிவிடும். 

இன்று தமிழ்நாட்டில் குடிப்பழக்கம் அதிகமாக இருக்கிறது. முதல் நாள் இரவு மது அருந்திவிட்டு மறுநாள் பகலில் நல்ல தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படி பழக்கம் இருந்தால் கண்டிப்பாக உங்களின் உடலும் கெட்டு உங்களின் பொருளாதாரமும் கெட்டுவிடும். 

உங்களின் பொருளாதாரம் உயர்வதற்க்கு லட்சுமி உங்களை நோக்கி விரும்பிவரவேண்டும் அதற்கு பிரம்மமுகூர்த்ததில் எழும்பொழுது உங்களை நோக்கி வரும். லட்சுமி உங்களிடம் வாசம் செய்யும்பொழுது நீங்கள் பொருளாதார பிரச்சினையில் சிக்கிக்கொள்ளமாட்டீர்கள். ஒரு பத்து நாட்கள் செய்து பாருங்கள். நல்ல பலனை நீங்கள் அனுபவிக்கலாம். அனைத்தும் அனுபவத்தில் செய்து பார்த்துவிட்டு தான் சொல்லுகிறேன். பரிசோதனை செய்து பாருங்கள்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

1 comment:

KJ said...

Great sir. Thanks a lot.