Followers

Monday, May 13, 2013

ஆன்மீக கண்கள்



வணக்கம் நண்பர்களே !
                     நமது நண்பர்கள் என்னை சந்திக்கும்பொழுது நீங்கள் நல்ல ஆன்மீகவாதிகளிடம் நீங்கள் பழக்கம் வைத்துக்கொள்ளவேண்டும் சொல்லிருகிறீர்கள் எப்படி அவர்களை கண்டுபிடிப்பது சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள் அவர்களுக்காக ஒரு பதிவு

ஒரு ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவரை கண்டுபிடிப்பது கடினமான ஒன்று. வெளியில் அவர்கள் காட்டிக்கொள்ள மாட்டார்கள். அதற்கு ஒரு வழி இருக்கிறது அவர்களின் கண்களை உற்றுநோக்கினால் தெரியும். ஆன்மீகவாதிகளின் கண்கள் காட்டிக்கொடுத்துவிடும் சாதாரண மனிதர்களின் கண்கள் போல் இருக்காது அவர்களின் கண்கள் வித்தியாசமாக இருக்கும். அந்த கண்களை நீங்கள் தொடர்ந்து ஐந்து நிமிடம் பார்த்தால் உங்களால் அந்த கண்ணை பார்க்கமுடியாது.

ஆன்மீகவாதிகளின் கண்களில் இருந்து அதிகமான சக்தி வெளிப்படும். அந்த கண்களை உற்றுநோக்கும்பொழுது உங்களால் தொடர்ந்து ஐந்து நிமிடத்திற்க்கு மேல் அந்த கண்களை பார்க்கமுடியாது. அப்படி தெரிந்தால் அவர்கள் ஆன்மீகவாதியாக இருக்ககூடும். அந்த கண்களை பார்ப்பது உங்களுக்கு நல்லது நடக்கும். எப்படி நடக்கும் என்று கேட்கிறீர்களா அவர்களின் சக்தி வெளிப்படும் ஒரு கருவியாக கண்கள் இருக்கின்றன. அவர்களின் சக்தியை நமது ஆத்மா உள்வாங்கும்.

அவர்களின் சக்தியை நாம் பெறுகிறோம் நாம் அவர்களின் சக்தியின் மூலம் நாம் இறைவனை தரிசனம் செய்ய ஒரு வழி. நீங்கள் ஆன்மீகவாதிகளை சந்திக்க சென்றால் அவர்களின் கண்களை பாருங்கள்.இதுவரை இப்படி செய்வில்லை என்றாலும் இனிமேல் நீங்கள் ஆன்மீகவாதிகளின் கண்களை பாருங்கள்.

ஒரு சில ஆன்மீகவாதிகளின் பாதங்களை பார்த்தாலும் புண்ணியம் தான். பாதங்களை பார்க்க கடினமானது. நடைமுறையில் கடினம் என்பதால் கண்களைப் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: