Followers

Tuesday, November 18, 2014

உங்களின் வீடு பகுதி 1


வணக்கம் நண்பர்களே!
                      ஒவ்வொரு மனிதனுக்கும் சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது கட்டவேண்டும் என்ற ஆசை இருக்கும். வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு சொந்த வீடு எப்படியாவது அமைந்துவிடவேண்டும் என்ற ஒரு வரமாக கடவுளிடம் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.  

சொந்த வீடு என்பது அமைகிறதா அல்லது அமையாத என்பதைப்பற்றி அப்புறம் பார்க்கலாம். முதலில் இருக்கின்ற வீடு எப்படிப்பட்டது என்பதை சோதிடத்தை வைத்தே நாம் தெரிந்துக்கொள்ளமுடியும்.

ஒவ்வொரு வீடும் ஏதாவது ஒரு நல்ல சக்தி அல்லது தீயசக்தியின் வசமாக தான் இருக்கும். நல்லது அமைந்துவிட்டால் அந்த வீடு சுபிஷ்சமாக இருக்கும். அதே நேரத்தில் கெடுதல் அமைந்துவிட்டால் அந்த வீட்டில் இருந்தால் நமக்கு பிரச்சினை மேல் பிரச்சினையாகிவிடும்.
வாஸ்து சாஸ்திரத்தை வைத்து வீட்டை நாம் கட்டினாலும் நமக்கு இருக்கும் கிரக நிலைகள் அந்த வீட்டை பாடாய் படுத்தி எடுத்துவிடும். மக்கள் வாஸ்து சாஸ்திரத்தை நம்பி தான் வீட்டை பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து வைத்துக்கொண்டு கட்டிடடம் கட்டுபவர்கள் அனைவரும் வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றியே வீடு கட்டுகிறார்கள். 

வீட்டில் அனைத்து விதியை பின்பற்றினாலும் உங்களின் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் உங்களின் வீட்டின் தலைவிதியை மாற்றி அமைத்துவிடும். கிரகங்களின் துணையால் தான் உங்களுக்கே வீடே அமைந்தாலும் இடையில் ஏற்படும் கெடுதல் கிரகங்களின் தாக்குதலில் உங்களின் வீடு பிரச்சினையில் மாட்டிவிடும். வீடு மாட்டினால் அதில் இருப்பவர்களும் மாட்டிக்கொள்வார்கள்.

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

No comments: