Followers

Thursday, November 27, 2014

ஆன்மீக அனுபவங்கள் 172


வணக்கம் நண்பர்களே!
                     நேற்று கூட ஒரு நண்பர் உங்களின் பதிவை எடுத்து வேறு ஒரு தளத்தில் போட்டுள்ளார்கள் என்ற தகவலை எனக்கு அனுப்பினார். நமது பதிவை எடுத்துபோட்டு தவறான செயலை தான் செய்கிறார்கள். அம்மன் அவர்களுக்கு தகுந்த சன்மானத்தை கொடுக்கும்.

நான் அம்மனிடம் பிராத்தனை செய்வது திக்கு தெரியாமல் இருந்த என்னை உன்னிடம் சேர்த்துக்கொண்டாய் நான் இனி எந்த நாளும் உன்னை துதிக்காமல் இருக்ககூடாது. எந்த நாளும் உன்னோடு தான் நான் இருக்கவேண்டும் என்று பிராத்தனை செய்வேன்.

நமது ஆன்மீகத்தின் உண்மை என்ன என்றால் ஆன்மீகத்தை பிடித்துக்கொண்ட பிறகு அந்த ஆன்மீகம் நம்மை விட்டு சென்றுவிடகூடாது. நமது ஆன்மீகம் போலிகளை வைத்துக்கொள்ளாது அதுவே தூக்கி எறிந்துவிடும்.

நாம் கொஞ்சம் போலிதனத்தை செய்தால் அதுவே உங்களை கொஞ்ச காலத்தில் ஆன்மீகத்தில் இருந்து தூக்கிவிடும். நீங்களே பல சாமியார்களை ஆன்மீகவாதிகளை பார்த்து இருப்பீர்கள். கொஞ்ச காலத்திற்க்கு ஏதாவது செய்துக்கொண்டு இருப்பார்கள். அதன் பிறகு அவர்கள் வந்த வேகத்தில் காணாமல் போய்விடுவார்கள். 

நமது ஆன்மீகம் தன்னை தானே சுத்தம் செய்துக்கொள்ளும் ஒரு ஆன்மீகம். இதில் மாட்டிக்கொண்டால் இதனை கடைசிவரை கண்ணியமாக நடந்துக்கொண்டு கரை சேர வழியை தான் பார்க்கவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: