Followers

Monday, November 3, 2014

நன்றி


வணக்கம் நண்பர்களே!
                      சுக்கீரிஸ்வரர் ஆலயத்தைப்பற்றி சொன்னவுடன் பல நண்பர்கள் அந்த கோவிலை கும்பாபிஷேகம் செய்யலாம் சொல்லுங்கள் அதற்கு எப்படி செய்யவேண்டும் சொல்லுங்கள் என்று கூட எனக்கு மெயிலிலும் போனிலும் விசாரித்தார்கள்.

நமது இந்தியாவில் பல கோவில்கள் இப்படி இருக்கின்றன. இதனை எல்லாம் அந்தந்த பகுதியில் இருக்கும் நண்பர்கள் அதனை தெரிந்துக்கொண்டு அந்த கோவிலுக்கு முறைப்படி என்ன செய்யவேண்டுமோ அதனை செய்யவேண்டும்.

நாம் ஒரு முறை சென்று அந்த கோவிலுக்கு செய்துவிட்டு வரலாம் ஆனால் தொடர்ந்து பூஜை செய்யப்படவேண்டும். கோவில் கட்டுவது பிரச்சினை இல்லை அங்கு தொடர்ந்து பூஜை செய்ய அதிக செலவு ஆகும். அதனால் தான் அந்தந்த பகுதியில் உள்ள நண்பர்களை வைத்து அந்த கோவிலை நன்கு கவனித்து வாருங்கள் என்று அவர்களுக்கு தேவையான உதவியையும் செய்து வருகிறேன்.

உங்களுக்கு நன்றியை தான் இந்த நேரத்தில் சொல்லவேண்டும். இவ்வளவு நாளாக ஜாதககதம்பத்தை படித்து வரும் நண்பர்கள் இந்தளவுக்கு எனது வார்த்தை நம்பியை இதனை எல்லாம் செய்யவேண்டும் என்று நினைக்கும் மனதிற்க்கு நன்றியை சொல்லவேண்டும் இந்த நேரத்தில் கண்டிப்பாக அம்மன் உங்களுக்கு நல்லது செய்யும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

No comments: