Followers

Saturday, November 1, 2014

இனிய தொடக்கம்


வணக்கம் நண்பர்களே!
                      பல நண்பர்கள் போனில் சனிப்பெயர்ச்சியை பற்றி எழுதுங்கள் என்றார்கள். சனிப்பெயர்ச்சி அன்று நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றும் கேட்டார்கள்.

சனிப்பெயர்ச்சிப்பற்றி திரும்பிய பக்கம் எல்லாம் எழுதிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதிலும் நானும் எழுதி உங்களுக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று தான் எழுதவில்லை. சனிப்பெயர்ச்சி கோச்சாரப்படி நடக்கின்ற ஒன்றாக இருந்தாலும் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை எல்லாம் ஏற்படுத்தாது.

சனிப்பெயர்ச்சி உங்களுக்கு சரியில்லை என்று தெரிந்ததால் சனிப்பெயர்ச்சி அன்றே நீங்கள் சனிக்கு பரிகாரம் செய்யவேண்டியதில்லை. பொறுமையாக சென்று இந்த மாதத்தில் ஒரு நாள் சென்று சனிபகவானை வணங்கிவிட்டு எள் தீபம் ஏற்றிவிட்டு வாருங்கள். 

சனிபகவானுக்கு ஒரு சிறந்த பரிகாரம் உங்களின் குலதெய்வத்தை அல்லது ஏதாவது ஒரு கிராமதேவதையாக பார்த்து ஒரு பூஜை செய்தால் போதும்.பூஜை செய்யமுடியவில்லை என்றால் சென்று வணங்கிவிட்டு வாருங்கள் உங்களுக்கு நல்லது நடக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு. 

No comments: