Followers

Sunday, November 16, 2014

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே !
                      கெடுதல் கிரகங்களின் பிடியில் ஒரு மனிதன் இருந்தால் கண்டிப்பாக அவனுக்கு எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காது. அந்த கிரகங்களின் தீயபலனை குறைக்கும்பொழுது மட்டுமே அவனுக்கு நல்ல வாய்ப்பை கொடுக்கமுடியும்.

என்னிடம் வரும் நண்பர்களுக்கு முதலில் நான் அம்மனிடம் தீயகிரகங்களின் தீயபலனை குறைத்துவிட்டு ஏதாவது வாய்ப்பை கொடுக்க ஏற்பாடு செய்வேன். அப்படி கொடுக்கும்பொழுது மட்டுமே வீட்டில் முடங்கி இருக்கும் மனிதனுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

ஒவ்வொருவரும் முதலில் இப்படி வாய்ப்பை அம்மன் கொடுப்பதை தான் நான் வழக்கமாக வைத்திருப்பேன். நமது நண்பர்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தினாலே போதும். வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிடலாம்.

நமது நண்பர்கள் இதனை கூட ஒழுங்காக பயன்படுத்துவதில்லை தூங்கிக்கொண்டிருப்பவர்களை தூக்கிவிடும்பொழுது அம்மனை கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள் என்று நான் சொல்லுவேன்.அதனை தவறவிடுபவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். இனிமேலாவது அம்மன் தரும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்துங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு


No comments: