Followers

Wednesday, November 5, 2014

செல்வவளம் சேருவதற்க்கு செய்யவேண்டியவை


வணக்கம் நண்பர்களே!
                      ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் முன்னேற்றம் காணவேண்டும் நல்ல செல்வ செழிப்போடு வாழவேண்டும் என்று தான் உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். உழைத்தால் மட்டும் போதுமா இறைவன் அதற்கு அருளவேண்டும் அல்லவா.

செல்வவளத்திற்க்கு என்றே பல நல்ல விசயங்களை பின்பற்றுங்கள் என்று ஜாதககதம்பத்தில் அடிக்கடி சொல்லிக்கொண்டு வருகிறேன். அந்த வகையில் ஒரு புதிய கருத்தை சொல்லுகிறேன். 

ஒன்றை மட்டும் முதலில் நினைவில் வையுங்கள் உங்களை மாற்றிக்கொள்ளாதவரை நீங்கள் என்ன தான் செய்தாலும் உங்களால் செல்வநிலையை அடையமுடியாது. பொதுவாக இந்துக்கள் அனைவரும் செல்வநிலையில் வாழ்ந்துவிடமுடியாது அதற்கு காரணம் இந்துக்களின் வழிபாடுகள் அனைத்தும் முக்தி என்ற நிலையை நோக்கியே அதிகமாக இருக்கும்.

முக்தி என்ற நிலை வந்துவிட்டால் அப்புறம் அங்கு செல்வவளத்திற்க்கு என்ன பேச்சு இருக்கமுடியும். அதே நேரத்தில் நீங்கள் கோவில் கோவிலாக அழைந்துக்கொண்டு இருந்தால் செல்வவளத்தில் ஒரு நாளும் முன்னேற்றம் காணமுடியாது. கேது உங்களுக்கு ஞானத்தை கொடுத்துவிடுவார். 

நான் சொன்ன பல நல்ல விசயங்கள் ஜாதககதம்பத்தில் இருக்கின்றன. அதாவது வெள்ளிக்கிழமை மட்டும் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவது மற்றும் பல கோவில்கள் இல்லாத விசயங்களை நான் சொல்லிருக்கிறேன். அதனை நீங்கள் செய்தாலே போதும் உங்களுக்கு செல்வவளம் வரும்.

நன்றி நண்பர்களே!

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு

No comments: