Followers

Friday, November 21, 2014

கலியுகம்


வணக்கம் நண்பர்களே!
                      கலியுகத்தில் ஒருவர் ஆன்மீகவாதியாக இருக்கவேண்டும் என்றால் அது மிகவும் கஷ்டம். கலியுகத்தில் ஆன்மீகவாதி வேஷம் போட்டு ஊரை ஏமாற்றுவார்கள் என்று சொல்லியுள்ளதாக குரு சொல்லியுள்ளார்.

கலியுகத்தில் சாமியார் வேஷம் போட்டு தான் அனைத்து வில்லங்கவேலையும் நடைபெறும் என்று சொல்லுவார். நீங்கள் ஒரு நல்ல ஆன்மீகவாதியை பார்க்க ஆசைப்பட்டால் அப்படிப்பட்டவரை சந்திப்பதே அரிதான ஒன்று. ஒருவர் ஞானம் அடைந்தால் அவர் வெளியில் வருவது கிடையாது. 

நீங்கள் ஆன்மீகம் கற்க வேண்டும் என்றால் பெரிய சாமியார் என்று செல்லாமல் சாதாரணமாக இருக்கும் ஆன்மீகவாதியிடம் சென்று ஆன்மீகம் கற்றுக்கொள்வது நல்லது.

ஆன்மீகத்தை மிகவும் நல்ல முறையில் சொல்லி தருபவர்கள் இன்றும் வெளியில் தெரியாத ஆன்மீகவாதிகள் தான் சொல்லி தருகிறார்கள்.பல இடங்களில் நான் பார்த்து இருக்கிறேன்.

மதுரையில் இருக்கின்றேன். மதுரையில் சந்திக்க விருப்பம் இருக்கும் நண்பர்கள் என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: