Followers

Thursday, November 6, 2014

சக்தி



வணக்கம் நண்பர்களே!
                    நேற்று கண்டியூர் இராமசுப்பிரமணியனை சந்திப்பதற்க்காக அவரின் இல்லத்திற்க்கு சென்று இருந்தேன். அவர் ஊர் ஆலங்குடி குரு கோவிலுக்கு அருகில் இருப்பதால் ஆலங்குடி குருவை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிட்டியது.பல முறை இந்த கோவிலுக்கு சென்றால் கூட நேற்றும் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

மாலையில் சென்று தரிசனம் செய்தேன். கோவிலில் கூட்டம் இல்லை நானும் என்னோடு வந்தவர் மட்டும் சென்று பொறுமையாக தரிசனம் செய்தோம்.கோவிலில் போட்டோ எடுக்க அந்தந்த கோவில் நிர்வாகதத்தில் கேட்டுவிட்டு தான் நான் போட்டோ எடுப்பது வழக்கம். இந்த கோவிலில் கேட்டபொழுது அவர்கள் போட்டோ எடுக்ககூடாது என்று சொல்லிவிட்டார்கள்.

ஒரு கோவிலில் சக்தி இருந்தால் நாம் போட்டோ எடுக்கும் கேமராவிலேயே தெரிந்துக்கொள்ள முடியும். கேமரா வழக்கத்திற்க்கு மாறாக ஒழுங்காக போட்டோ எடுக்காது. அதனை மீறி எடுத்தால் கூட அந்த போட்டோவில் சக்தியின் வெளிப்பாடாக ஏதாவது ஒன்று தெரியவரும். ஒரு சில கோவிலில்களில் போட்டோ எடுக்கும்பொழுது மங்கலாகவும் தெரியும்.

இந்த வழியில் கூட நீங்கள் கோவிலில் சக்தி இருக்கிறதா இல்லையா என்று நாம் தெரிந்துக்கொள்ள முடியும்.ஒரு சில கோவிலில் கேமராவில் கூட கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு சக்தி இருக்கும்.


நன்றி நண்பர்களே!

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு


No comments: