Followers

Tuesday, November 18, 2014

பச்சைப்பரப்புதல்


வணக்கம் நண்பர்களே!
                      பல முறை நான் சொல்லியுள்ள செய்தியை இப்பதிவில் மறுமுறை சொல்லுகிறேன். பச்சைப்பரப்புதலைப்பற்றி சொல்லிவருகிறேன். பச்சைப்பரப்புதலை தொடர்ந்து செய்து வரும்பொழுது மட்டுமே உங்களின் தெய்வம் உங்களுக்கு நல்லது செய்ய ஆரம்பிக்கும்.

அடுத்தவர்களிடம் நமது சொத்தை வைத்து கடன் கேட்டால் கூட உடனே நமக்கு கொடுக்கமாட்டாரகள் அப்படி உலகம் இருக்கும்பொழுது நமது குலதெய்வம் எப்படி உடனே நமக்கு நல்லது செய்ய ஆரம்பிக்கும்.ஒவ்வொருவரின் செயலையும் நன்றாக சோதனை செய்து முடித்த பிறகு தான் நமது தெய்வம் நமக்கு கொடுக்க ஆரம்பிக்கும்.

பிரபஞ்சத்தில் எந்த ஒரு செயலையும் தொடர்ந்து செய்துவந்தால் கண்டிப்பாக இந்த பிரபஞ்சம் உங்களுக்கு கொடுக்காமல் இருக்காது. அதனால் நாம் நமது குலதெய்வம் அல்லது இஷ்டதெய்வத்திற்க்கு பச்சைப்பரப்புதலை தொடர்ந்து செய்து வாருங்கள்.

ஒன்றும் நடக்காமல் இருக்கின்றதே என்று கவலைக்கொள்ளாமல் நம்பிக்கையோடு தொடர்ந்து பச்சைப்பரப்புதலை செய்து வாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு உங்களின் குலதெய்வம் கொடுக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: