Followers

Tuesday, May 19, 2015

கோரிக்கை நிறைவேற தீப வழிபாடு


வணக்கம்!
          நமக்கு ஏதாவது ஒரு பிரச்சினை வந்துக்கொண்டே தான் இருக்கும். அப்படி பிரச்சினை ஏற்படும்பொழுது அதனை கண்டு மனம் தளராமல் அதனை போக்க என்ன வழி என்று பார்த்து செயல்படவேண்டும்.

தன் கையில் பொருள் வைத்திருப்பவன் அதாவது பணம் வைத்திருப்பவன் பிரச்சினையை சரிசெய்துக்கொள்வான். பணம் இல்லாதவர்களுக்கு பிரச்சினையை சரி செய்வதற்க்கு வழி தெரியாது. அப்பொழுது நீங்கள் செய்யவேண்டியது உங்களுக்கு பிடித்தமான தெய்வத்திற்க்கு தொடர்ந்து தீபம் ஏற்றி வருவது நல்லது.

தீபம் ஒரு நாளில் ஏற்றி வைத்தால் பிரச்சினை தீர்ந்துவிடாது தொடர்ச்சியாக தீபம் ஏற்றி வரவேண்டும். என்னிடம் பணம் இல்லாத நாளில் எனக்கு வந்த பிரச்சினையை தீர்த்தவிதத்தைப்பற்றி சொல்லுகிறேன் பாருங்கள்.

கோவிலுக்கு சென்று பிறர் ஏற்றும் தீபத்தை பார்ப்பேன். அந்த நேரத்தில் ஒரு ரூபாய் தீபம் வாங்க கூட என்னிடம் பணம் இல்லை. பிறர் ஏற்றும் தீபத்தை பார்த்தே அந்த தெய்வத்திற்க்கு சமர்ப்பணம் செய்து வெற்றி பெற்றுஇருக்கிறேன்.


உங்களிடம் பணம் இருந்தால் தொடர்ச்சியாக தீபம் ஏற்றி வாருங்கள். நீங்கள் நினைக்கும் காரியம் வெற்றி பெறும். ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றுங்கள் அது போதும் உங்களின் கோரிக்கை நிறைவேறும். இதனை செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

nallur parames said...

Veettilum erralaama bro?