Followers

Wednesday, August 12, 2015

காயத்ரி மந்திரப்பயிற்சி



வணக்கம்!
         வளர்பிறை இன்னும் சில தினங்களில் வரப்போகின்றது. காயத்ரி மந்திரம் செய்பவர்கள் மந்திரத்தை புதியதாக தொடங்க நல்ல நேரம் இது. தற்பொழுது இருந்து ஆயத்தம் ஆனால் வளர்பிறையில் செய்வதற்க்கு எளிதாக இருக்கும்.

காயத்ரி மந்திரப்பயிற்சியை தொடர்ந்து விடாமல் செய்வேன் என்று நினைப்பவர்கள் மட்டும் தொடர்புக்கொள்ளுங்கள். தொடர்ந்து ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடையவேண்டும் என்று விருப்பம் இருப்பவர்கள் இதனை செய்ய ஆரம்பிக்கலாம்.

இருபது நாட்கள் செய்துவிட்டு ஒரு மாதம் ஓய்வு எடுத்துக்கொண்டு அடுத்த மாதம் செய்யலாம் என்ற நினைப்போடு வரவேண்டாம். தொடர்ந்து செய்யவேண்டும் என்ற நினைப்போடு வரும்பொழுது மட்டுமே இதனை செய்யலாம்.

பெண்கள் இந்த பயிற்சியை செய்யலாம். ஏற்கனவே இந்த பயிற்சியை செய்பவர்கள் என்னை தொடர்புக்கொண்டு மேலும் எப்படி எல்லாம் இதனை செய்யலாம் என்று கேட்டுக்கொள்ளுங்கள். எனக்கு தெரிந்த வரை பல நண்பர்கள் விடாமல் இதனை செய்துக்கொண்டு வருகிறார்கள். கண்டிப்பாக நல்ல பலனை அவர்கள் அனுபவித்து இருப்பார்கள். மேலும் சக்தியை கூட்டவேண்டும் என்று நினைப்பவர்கள் தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளுங்கள்.

புதியதாக செய்ய நினைப்பவர்கள் ஏதாவது ஒரு தெய்வத்தின் காயத்ரி மந்திரத்தை எடுத்துக்கொண்டு என்னை தொடர்புக்கொள்ளுங்கள். உங்களுக்கான வழிகாட்டுதலை நான் தருகிறேன்.

புதிய பிளாக்கிற்க்கு வருட சந்தா அனுப்பிய அனைத்து நண்பர்களுக்கும் மெயில் வழியாக செல்வவளம் குறித்த பதிவை அனுப்பிவிட்டேன். அதனை படித்துவிட்டு செய்ய ஆரம்பிக்கலாம்.  விரைவில் உதயமாக உள்ளது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: