Followers

Friday, August 14, 2015

புதிய தொடக்கத்தைப் பற்றி


வணக்கம்!
          ஒவ்வொருவரின் வாழ்விலும் நிறைய பிரச்சினைகள் வந்துக்கொண்டே இருக்கும். ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று தாக்கிக்கொண்டே இருக்கும். தெய்வசக்தியை நாம் பிடித்துக்கொண்டு அந்த தாக்குதலில் இருந்து நாம் தப்பித்து வந்துக்கொண்டு இருக்கிறோம்.

ஜாதககதம்பத்தில் பல பரிகாரத்தை உங்களுக்கு பரிந்துரை செய்து இருக்கிறேன். ஒவ்வொரு கிரகத்திற்க்கும் ஒவ்வொரு விதமான பரிகாரம் செய்ய சொல்லி இருக்கிறேன். அதனை எல்லாம் செய்து நீங்கள் செய்து நல்லதை பெற்று இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

பொதுவாக இதில் வரும் நண்பர்களுக்கு அவர்களின் ஜாதகத்தில் எந்தந்த கிரகங்கள் பிரச்சினையை தரும் என்று நன்றாக தெரியும். அதற்கு என்ன வழி என்று தெரியாமல் இருக்கலாம் அல்லது தெரிந்து அதனை எப்படி செயல்படுத்துவது என்பது கூட தெரியாமல் இருக்கலாம். ஒரு சிலர் தெரிந்தும் அதனை செயல்படுத்தியும் வெற்றி அடையாமல் இருக்கலாம்.

நமது புதிய பிளாக்கில் உள்ள நண்பர்களுக்கு இன்று அதற்கு ஒரு எளிய பரிகாரத்தை சொல்லப்போகிறேன். அவர் அவர்களே கிரகங்களுக்கு சாந்திப்படுத்திக்கொள்ளும் எளியமுறை. இது மட்டும் தான் அவர்களுக்கு சொல்லப்படும் கிரகங்களுக்கான பரிகாரம். அதற்கு பிறகு அவர்களுக்கு எந்த ஒரு பரிகாரமும் பரிந்துரை செய்யபோவதில்லை.

ஏன் பரிந்துரை செய்யப்போவதில்லை என்றால் ஒரு பரிகாரத்தை வைத்து அனைத்து கிரகங்களுக்கும் சாந்திப்படுத்திக்கொள்ளலாம். அதன் பிறகு அதற்கு தேவையில்லாமல் போய்விடும்.

நேற்று நான் புதிய பிளாக்கில் இணைந்த நண்பர்களுக்கு அனுப்பிய செல்வவளம் பற்றிய பரிகாரத்திற்க்கு வெளியில் நான் வாங்கும் பணம் ஐந்து லட்ச ரூபாய். அந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்பதைப்பற்றி நேற்று அவர்களுக்கு அனுப்பி உள்ளேன்.

ஜாதககதம்பத்தில் உள்ள நண்பர்கள் புதிய பிளாக்கில் இணைந்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும் எளிதில் தீர்த்துக்கொள்ளும் ஏகாப்பட்ட வழி புதிய பிளாக்கில் சொல்லபோகிறேன். உடனே பணத்தை செலுத்திவிட்டு தங்களைப்பற்றிய விபரத்தை எனக்கு அனுப்பிவையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு